வெள்ளி, 8 ஜனவரி, 2010

[thodu varmam] வர்மம்.

[thodu varmam] வர்மம்.
____________________
மனித உடம்பில் பல மர்ம முடுச்சுகள் அந்த மரும பகதீகளை விரல்கொண்டு தொட்டல் போதும்
அவயங்கள் செயல்லருந்து போகும். எப்படி தட்டுவது எங்கு தட்டுவது.
மனித உடலில் உள்ள ரத்தக் குழாய் பாரவும் நரம்புகளின் முடிச்சுகளில் தான்
வர்ம நிலைகள் உள்ளன இவைகளை தற்காலிக மாக அல்லது நிரந்தமாக செயல் இழக்கச்
செய்வது தான் வர்மமாகும்.
எதிரியின் உடலைத் தட்டுவதால்.எதிர்ரி எதுவும் செய்யே இயலாமல் மயக்க நிலைக்கு
தல்லலாம்.போது வாக நரம்புகள் எங்கேல்லாம் செர்ந்து இருக்கின்றதொ(சந்திப்பு)
இனையும்மிடங்கள் ஒரு சிரிய முடிச்சு பின்னல்- அது தான் வர்ம நிலைகளாகும்.
வர்மம் என்பது மர்மம் என்னும் சொல்லாம்.மர்மம் என்றால் ரகசியம் இது தான் என்று
அறிய முடியாதது தான் வர்மம்,
மனித உடல் பொற்வைக்குல்.எலும்புகள் மொத்தம் 210கும்
நரம்புகள். உடம்பின் எல்லா பாகளும் உரிய நெரத்தில் சரியான முறையில் வேலை செய்ய
வைப்பது நரம்பு மண்டலமாகும்.
மூளையும் தண்டு வடமும் நரம்பு மண்டலத்தின் இரண்டு முக்கியமான பிரிவுகளாகும்.
மூளையின் வலதுபக்கம்,இடதுபக்கம் ஆகிய இரு பகுதிகளில் இருந்து நரம்புகள்
புறப்படுகின்றன.தலையில் அடிப்பகுதியில் உள்ள துவாரத்தின் மூலமாக முதுகெலும்பிற்குள்
நுழைகின்றன.இடது வலதுபக்கமாக,வலது இடதுபக்கமாக.
12 டு ஜொடி நரம்புகள் மூளையிலிருந்து பிரிந்து நெற்றிப் பகுதிக்கு வருகின்றன
என்றும்,31து ஜொடி நரம்புகள் தண்டு வடத்திலிருது புறப்பட்டு உடம்பு முழுவதும்
பறவிக் கிடக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

இணையகக் கிடக்கும் நரம்புகள் எத்தானை எத்தனையோ? கிளைகளாய் பிரிந்து பரவி
இருக்கின்றது.போகப்போக நரம்பின் அளவு சிறிது சிறிதாக மாறுகின்றன.கடைசியில்
கண்ணூக்குத் தெரியாத மெல்லியதாக இருக்கும்.

உடம்பு முழுவதும் வலைப் பின்னல்போல பரவிக்கிடப்பதால் உடம்பின்
எந்தப் பகுதியில் சங்கடம் உண்டானாலும் அது நரம்பைத் தாக்குகின்றன.

நரம்புகள் எலும்புப்பின் இடுக்குகள் வழியாகத்தான் உடலில் பரவுகின்றன.நரம்புகள் தான்
தசைகளை இயக்குகின்றன. நரம்புகள் தான் செய்திகளைப் பரப்புகின்றன
கட்டளைகளைத் தெரிவிக்கின்றன.உயிரின் முக்கிய பகுதியான மூளையின்
தூதுவனாகச் செயல்படுவது நரம்பு தான்.

தசநாடிகள். இடகலை,பிங்கலை,சுழிமுனை,காந்தாரி,அத்தி,சிங்குவை,அலம்புடை,குருவை,
சங்கினி என பத்தும் தசநாடி எனப்படும்.
1.இடைகலை, வலது கால் பெருவிரலில் இருந்து (கத்திரிக் கோல் முனையைபோல)
இடடு நாசியைப் பற்றி நிற்கும் நாடி.
2.பிங்கலை, இடது கால் பெருவிரலில் இருந்து( ,,,,,,,,,,,, )வலது நாசி வரை உள்ள நாடி.
3.சுழிமுனை; முலாதாரத்தில் இருந்து எல்லா நாடிகளுக்கும் ஆதாரமாக நடுநாடியாக
தலை வரை இருக்கும் நாடி.
4.சிங்காலை; உள்நாக்கில் நின்று உண்ணும் உணவை விழுங்கச் செய்வது.
5.புருடன்; மூலாதாரத்தில் இருந்து வலது கண் வரை இருப்பது.
6.காந்தாரி; மூலாதாரத்தில் இருந்து இடது கண் வரை இருப்ப்து.
7.அத்தி; மூலாதாரத்தில் இருந்து வலது காது வரை இருப்பது.
8.அலம்புடை; மூலாதாரத்தில் இருந்து இடது காது வரை இருப்பது.
9.சங்கினி; மூலாதாரத்தில் இருந்து பிறப்புறுப்பு வரை இருபது.
10.குருவை; மூலாதாரத்தில் இருந்து வாய்வரை இருப்பது.
--------------------------------------------------------------------------------------------
இந்த 10 நாடிகளில் இடைகலை,பிங்கலை,சுழிமுனை என்னும் மூன்று நாடிகளே முக்கியம்
மானது.எனவே அவைகளை திரிநாடி எனச் சொல்வர்.பிரம நாடி,விஸ் நாடி,ருத்திர நாடி
என்றும் சொல்லபடுவதுண்டு.

இடகலை,பிங்கலை,சுழிமுனை என்ற மூன்றும் முறையே வாத,பித்த,சிலேத்தும நாடிகளின்
அடக்கம் எனவும் மூடிவில் இம்மூன்றும் வாதத்தில் இனையும் என்றும் சொல்லப்படும்.

காந்தாரி,அத்தி,சிங்குவை,அலம்புடை முதலிய நாங்கும் பித்தத்திலும்,குருவை,சங்குனி,
புருடன் ஆகிய மூன்றும் சிலேத்துமத்திலும் இணையும் என்பர்.

காற்றே கடவுள்
--------------------
காசேதான் கடவுள் என்பது இன்றைய உலக வழக்கு.சித்தர்கள் காற்றைத்தான்
கடவுளுக்கு சமமானதாகச் சொன்னார்கள்.
பித்தம் என்னும் நெருப்பும்,கபம் என்னும் நீர்த் தன்மையும் அதிகமாவதும்,
குறைவதும்,பரவுவதும், வாதம் என்னும் காற்றின் பணிகளாகும்.
வாதம், வாயு,காற்றும்,வளி கால என்றெல்லாம் அழைக்கப்படும் முதன்மைக் குணமான வாயு
பத்து கிளைகளாக செயல்படும்.
பிராணன்,அபானன்,வியானன்,சமானன்,நாகன்,கூர்மன்,கிரிகரன்,தேவதத்தன்,தனஞ்சயன்.
சாதாரணமாக ஒரு நிமிடத்திற்க்கு 15மூச்சு வீதம் ஒரு மனிதன் 24 மணி நேரமாகிய
ஒரு நாளில் 20,600 மூச்சுகள் சுவாசிக்கிறான்.ஒரு சுவாசத்திர்க்கு நாங்கு அங்குலம் வீதம் அழிவு
உண்டாகின்றது.மீதமுள்ளவை தான் பிராணன் என்னும் வாயு உடலில் செயல்படுகிறது

(வர்மம் 2)ப, அபான வாயு எனப்படும் மலக்காற்று மலவாயிலும் கருவாயிலும் இருந்து
பல நீர்களை வெளியே தள்ளுகின்றது.வியானவாயு தொலில் இருந்துகொண்டு 7200
நரம்புகளில் பரவி நீட்டுவது,மடக்குவது,தொடுவது முதலிய பணிகளுக்கு உதவுகின்றது.
உதான வாயு உணவுச் சாரத்தை செரிக்கச் செய்து நாடிகளில் பரப்புகின்றது.
சமான வாயு தெங்கி இருக்கும் வாயுக்களைச் சமமாக பரப்புகின்றது.
நாகன் என்னும் வாயு கண் விழித்து பார்க்கவும்,அறிவில் உணர்வும் செய்கின்றது
கூர்மன் என்னும் வாயு வாஉ மூடல்,சிரித்தல்,கொட்டாவி விடுதல் முதலிய பணிகளைச்
செய்கின்றது.கிரிகரன் என்னும் வாயு மூக்கு, நாக்கு முதலிய இடங்களில் உணர்வை
எழுப்புவதுடன் தும்மல்,இருமல் முதலியன உண்டாக்குகிறது.
தேவதத்தன் என்னும் வாயு மலவாய்,கருவாய்ப் பகுதிகளில் பரவிவந்து கோபம்
சோம்பல்,மோகம் என்ற உணர்வுகளைச் செய்கின்றது.தனஞ்செயன் என்னும் வாயு
உடல் முழுவதும் பரவி இருப்பது.மரணம் மடைந்த பின்னர்(குரிப்பிட்டநெரம் வரைஇருந்து)
வெளியேறும் காற்று.*
இந்த வாயு என்னும் காற்று பரவிக்கொண்டு நடமாடிக்கொண்டு இருந்தால்தான் உடல் இயங்கும்
அப்படி நடக்காமல் ஒரே இடத்தில் அல்லது ஆங்காங்கே தடைகள் உண்டாக்குவதே உடல்
செயல் படாததற்குக் காரணம்.வர்மத் தாக்குதல் உண்டாக்குவதன் தத்துவமே இதுதான்.
குறிப்பிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால் இளக்குவதே-தடைப்பட்ட
காற்றை வெளியாக்குவதே வர்ம மருத்துவ முறையாகும்.
தேவை இல்லை என்பதை விட்டுவிட்டு!
அவசியம் தேவை1 நாடிப் பார்த்தல்
வர்ம மருத்துவத்துக்கு தெரிய வேண்டியவைகளில் முக்கியமானது
நாடி பார்த்தல்.காற்று எனப்படும் வாயுவின் ஓட்டம்தான் உடல்
இயக்கத்திற்கு மிக முக்கியமானதாகும்.இந்த நடமாட்டத்தை அறியும்
கலைதான் நாடி பார்பது.
பிறப்புறுப்பு,குதிங்கால், தொப்புள்,கை,மார்பு,கழுத்து,புருவம்,உச்சி,காது,மூக்கு முதலிய இடங்களில் நாடித்
துடிப்பைக்காணமுடியும் என்றாலும் தெளிவாகப் பார்க்கவும்,எந்த
நெரத்திலும்,எல்லா இடங்களிலும் நாடி பார்க்க சிறந்த இடம் கைகள்
தான்.ஆண்களுக்கு வலது கையிலும் பெண்களுக்கு இடது கையிலும்
நாடி பார்க்கவேண்டும்.நோயாளியின் முன் கையை சற்று நீட்டி மடக்கி
விரல்களை உருவி விட்டு பிறகு சற்று அளவுடன் உயரத் தூக்கிப்
பிடித்துப் பார்க்கவேண்டும்.
நொயாளியின் முன் கையை நீட்டி மணிக்கட்டிற்கு ஒரு அங்குலம்
தள்ளி பெருவிரல் பக்கமாக தனது மூன்று விரகளையும் இலேசாக
அழுத்தியும் தளர்ச்சியாகவும் பார்க்கவேண்டும்.
சுட்டு விரல்,நடுவிரல்,மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால்
மட்டும் நாடி பார்க்க வேண்டும்.சுட்டு விரலால் தெரிவது வாதம்.
நடுவிரலில் தெரிவது பித்தம்.மொதிர விரலில் தெரிவது சிலெத்துமம்.
------------------------------------------------------------------------------------------
நாடிகள் சிறண நிலையில் இல்லாது இருப்பவர்கள்
விஷம் சாப்பிட்டவர்,போதை மருந்து சாப்பிட்டவர்,அதிக ரத்தம்
போக்கு உள்ளவர்,ரத்த குரைவுயுடையவர்,
நடை; வாத நாடி-அன்னம்,கோழி,ஓணான்,மயில்,புறா முதலியவைகளில் ஏதாவது ஒன்று
நடப்பது போல் தெரியும்.
பித்த நாடி-அட்டை,ஆமை நடையைப் போல்லிருக்கும்.
சிலேத்தும நாடி-பாம்பு நடையைப் போலத் தெரியும்.
வாத நாடி அளவுக்குமேல் அடித்தால் வாயில் புளிப்புச் சுவை
உண்டாகும்.பித்த நாடி அளவிற்குமேல் இருந்தால் வாயில் கசப்பு சுவை
உண்டாகும்.சிலெத்தும நாடி அளவிற்குமேல் இருந்தால் தித்திப்பு
சுவை உண்டாகும்.
வர்ம இளக்கு முறைகளில் வீட்டில் உள்ள பொருட்களே மிகுதியாகக்
கையாளப்படுகின்றன.சுக்கு குளுமையை நீக்கி வெப்பத்தைக் கொப்பது
வாயு ஓட்டத்தை சீராக்குவது.ஆகையால் சுக்கு கியாழமாகவோ,
ஊதலாகவோ,பொடியாகவோ பயன்படுத்தப்படுகிறது.
உணவு கஞ்சிச் சொறு
சொற்றுடன் கூடிய கஞ்சி இதை உள்ளே சாப்பிட்டால் உடல் பெருகும்.
உடம்பு அழகு உண்டாகும்.வெப்பம் மாறும்.அதிகம் உண்பதால் சளி
உண்டாகும்.
கொதி கஞ்சி;--- சொறு வேகும்போது வடித்து எடுத்து கொதி கஞ்சி.
இதைக் குடிப்பதால் வீரிய வளர்ச்சி உண்டாகும்.
உறை கஞ்சி:--- கஞ்சி நீரை வடித்தவுடன் சூடாக இருக்கும் போது
குடிக்காமல் அதைப் பாத்திரத்திலேயே வைத்து விட்டால் கஞ்சி நீர்
தைரைப் போல் உறைந்துவிடும்.இந்தக் கஞ்சிதான் உறை கஞ்சி
என்பது.இதைச் சாப்பிடக்குடாது.அதனால் வாதத்தையும்,சளியையும்
அதிகமாகும்.
--------------------------------------------------------------------------------------------------
தலைப் பகுதியில் உள்ள வர்மங்கள்:-37
1.திலர்த வர்மம்,2.கண்ணாடி கால வர்மம்,3.மூர்த்தி கால வர்மம்,4.அந்தம் வர்மம்,
5.தும்மிக் கால வர்மம்,6.பின் சுவாதி வர்மம்,7.கும்பிடு கால வ,
8.நட்சத்திர வ,9.பால வ,10மேல் கரடி வ,11.முன் சுவாதி வ,
12.நெம வர்மம்,13மந்திர கால வ,14.பின் வட்டிக் கால வ,15.காம்பூதி
கால வ,16.உள் நாக்கு கால வ,17.ஓட்டு வ,18.சென்னி வ,19.பொய்கை
கால வ,20அலவாடி வ,21.மூக்கடைக்கி கால வ,22கும்பேரி கால வ,
23.நாசி கால வ,24.வெட்டு வ,25.அண்ணாங் கால வ,26.உறக்க கால
வ,27.கொக்கி வ,28.சங்குதிரி வ,29.செவிகுத்தி கால வ,30.கொம்பு கால வ,
31.சுமைக்கால வ,32.தலைப்பாகை வ,33பூட்டுடெல்லு வ,34மூர்த்தி அடக்க வ,35
பிடரி கால வ,36பொச்சை வ,37.சரிதி வர்மம்.
நெஞ்சுப் பகுதியில் உள்ள:---13.
1.தள்ளல் நடுகுழி வர்மம்,2.திவளைக் கால வ,3.கைபுஜ மூன்றாவது வரி வ,4.சுழி ஆடி வர்மம்,5.அடிப்பக்கால வர்,6.முண்டெல்லு வர்,
7.பெரிய அஸ்தி சுருக்கி வர்,8.சிறிய அஸ்தி சுருக்கி வர்,9.ஆனந்த வாசு கால வர்,10.கதிர் வர்,11.கதிர் கால வர்,12.கூம்பு வர்,13.ஹனுமார் வர்மம்.
உடலின் முன் பகுதியில் உள்ளவை -15
1.உதிரக்கால வர்,2.பள்ளை வர்,3மூத்திரகால வர்,4.குத்து வர்,5.நேர்
வர்,6உறுமிக்கால வர்,7.ஆமென்ற வர்,8.தண்டு வர்,9.லிங்க வர்,10.
அண்ட கால வர்,11.தாலிக வர்,12.கல்லடைக் கால வர்,13.காக்கட்டை கால வர்,14.புஜ வர்,15.விதனுமான் வர்மம்.

முதுகுப் பகுதியில் உள்ளவை -10
1.மேல் சுருதி வர்,2.கைக்குழி காந்தாரி வர்,3.மேல்கைப் பூட்டு வர்,4.
கைச்சிப்பு எலும்பு வர்,5.பூணூல் கால வர்,6வெல்லுறுமி தல்லுறுமி வர்,7.கச்சை வர்,8.கூச்ச பிரம வர்,9.சங்குதிரி கால வர்,10.வலம்புரி இடம்புரி வர்மம்.

கைகளின் முன் பக்கம் உள்ளவை -9
வலம்புரி இடம்புரி, தல்லை அடக்க,துதிக்கை,தட்சணக் கால,சுழுக்கு,மூட்டு, மொளியின்,ச்கைக்குசத்திட,உள்ளங்கை வெள்ளை,ஆக 9.

கருத்துகள் இல்லை: