திங்கள், 15 பிப்ரவரி, 2010

PDFPortable Document Format பி.டி.எப்.

டாகுமெண்ட் பார்மட்களில், பயன்பாட்டில் நமக்கு அதிகம் உதவுவது பி.டி.எப். (PDFPortable Document Format) பார்மட் ஆகும். இதனை உருவாக்க அடோப் சாப்ட்வேர் ஒன்று விற்பனை செய்யப்படுகிறது. பி.டி.எப். டாகுமெண்ட்களைப் படிக்க அடோப் ரீடர் இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது. பைல்களை (எக்ஸெல், வேர்ட், பி.பி.டி., போன்றவற்றை) பி.டி.எப். பைலாக மாற்ற வேண்டிய அப்ளிகேஷன் புரோகிராம் கட்டணம் செலுத்தித்தான் பெற வேண்டும். ஆனால் அதே நேரத்தில் பி.டி.எப். பைல்களை உருவாக்கவும், உருவாக்கிய பைல்களைப் பிரித்து வைக்கவும், பகுதி பகுதியாக அவற்றை அமைக்கவும், ஒன்றுக்கு மேற்பட்ட பி.டி.எப். பைல்களை இணைக்கவும் இணையத்தில் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.


1. பி.டி.எப். மேக்கர் (PDF Maker from  http://www.pdfmaker.biz/): ஒரே கீ கிளிக்கில் பி.டி.எப். பைலாக மாற்றும் திறன் கொண்டது இந்த சாப்ட்வேர். எந்த டெக்ஸ்ட் எடிட்டரிலும் டாகுமெண்ட் ஒன்றை தயாரித்துவிட்டு, இந்த தளம் சென்று டவுண்லோட் பட்டனில் கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் லோக்கல் டிரைவில், பைலுக்கான பி.டி.எப். டாகுமெண்ட் கிடைக்கும். எந்த பைல் வகையாக இருந்தாலும் பி.டி.எப். டாகுமெண்ட்டை இந்த தளம் தரும். அத்துடன் இதற்கு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கலாம். புதிய டெக்ஸ்ட்டை இணைக்கலாம். பி.டி.எப். ஆன பின்னும் டெக்ஸ்ட்டில் அடிக்கோடிடலாம்; போல்ட் செய்திடலாம்; புதிய படங்களைச் சேர்க்கலாம்; ஏற்கனவே இருக்கிற கிராபிக்ஸ் ஆப்ஜெக்டை நீக்கலாம். பி.டி.எப். ஆன பக்கங்களை சுருக்கலாம், நகர்த்தலாம், ஒன்றுடன் ஒன்றை இணைக்கலாம். என்கிரிப்ட் மற்றும் டி கிரிப்ட் செய்திடலாம்.

2. பி.டி.எப் – டு – வேர்ட் (PDF2Word from   http://www.pdfonline.com/pdf2word /index.asp): எந்தவிதமான சிக்கலும் இன்றி பி.டி.எப். பார்மட்டில் உள்ள பைலை மீண்டும் வேர்ட் டாகுமெண்ட்டாக மாற்றலாம். எந்த புரோகிராமினையும் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இந்த தளம் சென்று, உங்கள் கம்ப்யூட்டரில் பிரவுஸ் செய்து,பி.டி.எப். பைலைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்தால், அது வேர்ட் பைலாக மாற்றம் செய்யப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும். இது போல மேலும் ஆறு புரோகிராம் களைப் பயன்படுத்திப் பார்த்ததில், இதுதான் மிகச் சிறந்ததாகவும், வேகமாகவும் செயல்படும் புரோகிராமாகத் தெரிகிறது. பி.டி.எப்.பைல்களை வேர்டுக்கு மாற்றம் செய்து, பின் அவற்றை எடிட் செய்து, பின் மீண்டும் பி.டி.எப். ஆக மாற்றம் செய்திட விரும்புவோருக்கு இது மிகவும் பயன்படும்.

3. பி.டி.எப். கிராக் (PDFCrack): நீங்கள் ஒரு பி.டி.எப். பைலை பாஸ்வேர்டுடன் உருவாக்கிய பின் பாஸ்வேர்டை மறந்துவிட்டீர்கள். கவலையே வேண்டாம்.  http://www.ensode.net/pdfcrack.jsf என்ற முகவரியில் உள்ள தளம் செல்லுங்கள். அங்கு Browse என்ற பீல்டில் கிளிக் செய்து உங்கள் பைல் எங்கு உள்ளது என்று காட்டவும். உடன் அந்த திறக்கப்படும். அது மட்டுமின்றி, பி.டி.எப். பைலை உருவாக்கியவர் இதில் காட்டிய வரையறைகள் எதுவும் இல்லாமல், அந்த பைல் புதிய பிரவுசர் விண்டோவில் காட்டப்படும்.

4. பி.டி.எப். டு எக்ஸெல் ஆன்லைன் (pdftoexcelonline): எக்ஸெல் ஒர்க்ஷீட்கள் பி.டி.எப். பார்மட்டில் கிடைத்தால், அதனை மீண்டும் எக்ஸெல் ஒர்க் ஷீட்டாக மாற்ற  http://www.pdftoexcelonline.com/ என்ற முகவரியை அணுகவும். எக்ஸெல் பைல் உங்களுக்கு இமெயில் வழியே அனுப்பப்படும்.

5. பி.டி. பைண்ட் (PD Find): கூகுள் மற்றும் பிங் போன்ற தளங்கள் வழியே நீங்கள் பைல்களைத் தேடிப் பெறலாம். ஆனால் சில வேளைகளில்நீங்கள் தேடும் சொற்களை பி.டி.எப். பைல்களில் மட்டும் தேடிப் பெற வேண்டியதிருக்கும். இந்த (http://pdfind.com)தளத்தில் தேடும் சொற்களைக் கொடுத்தால், அவை உள்ள பி.டி.எப். பைல்கள் இருக்கும் இடம், அந்த பைல் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற விபரங்களுடன் காட்டப்படும்.

6. பி.டி.எப். வியூ (PDFVue): அடோப் அக்ரோபட் ரீடர் செய்திடும் உதவியை இந்த தளம் ஆன்லைனில் நமக்குத் தருகிறது.  http://www.pdfvue.com/ என்ற தளத்தில் இது கிடைக்கிறது. உங்கள் டாகுமெண்ட்டை இதில் அப்லோட் செய்து பி.டி.எப். பைலாகவும் மாற்றி எடிட் செய்திடலாம்.

7.எச்.டி.எம்.எல். டு பிடிஎப் கன்வெர்டர் (Html to PDF Coverter): எந்த ஒரு இணைய தளத்தினையும் அல்லது எச்.டி.எம்.எல். பைலையும் பி.டி.எப். பைலாக மாற்றித் தரும். செல்ல வேண்டிய தளம்  http://htmlpdfconverter.com/

8. மெர்ஜ் பிடிஎப் (Merge PDF): எந்த சாப்ட்வேர் தொகுப்பையும் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடாமல், அதிக பட்சம் பத்து பி.டி.எப். பைல்களை இணைக்கலாம். இதனை மேற்கொள்ள நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி http://www.mergepdf.net. ஒவ்வொரு பைலும் 5 எம்பி க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு நேரத்தில் 10 பைல்களை இணைக்கலாம். பி.டி.எப். பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்தால் போதும்.

9.கவுண்ட் ஆன் இட் (Count On It): பி.டி.எப். டாகுமெண்ட் ஒன்றில் உள்ள கேரக்டர்களையும் சொற்களையும் எண்ணி அறிய வேண்டுமா? 1 எம்பி வரை உள்ள பி.டி.எப். பைல்களை இதன் மூலம் பயன்படுத்தி எண்ணிக்கையைப் பெறலாம்.  http://felixcat.com/tools/wordcount/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் இந்த வசதி கிடைக்கிறது. PDF, HTML, XML, CSV,, பார்மட் பைல்களை மட்டுமே சப்போர்ட் செய்திடும். எம்.எஸ். ஆபீஸ் பைல்களை பயன்படுத்தாது.

10. ஸ்பீடி பி.டி.எப். (SpeedyPDF): இது ஒரு சிறிய அப்ளிகேஷன். இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால், இது ஒரு பிரிண்டராக உங்கள் கம்ப்யூட்டரில் அமர்ந்துவிடும். நீங்கள் பி.டி.எப்.பார்மட்டில் ஒரு பைலை மாற்ற வேண்டும் என்றால், அதனை பிரிண்ட் கட்டளை கொடுத்து, கிடைக்கும் டயலாக் பாக்ஸில் பிரிண்டராக ஸ்பீடி பிடிஎப் தேர்ந்தெடுக்க வேண்டும். பைல் பி.டி.எப். பைலாக மாற்றித் தரப்படும். செல்ல வேண்டிய தள முகவரி  http://www.brothersoft.com/ speedypdf30012.html

M S ஆபீஸ் 2010

வரும் ஜூன் மாதம் வெளியிடப்பட இருக்கும் எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பினைக் கம்ப்யூட்டர் ஒன்றில் பதிந்து இயக்க, கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் திறன் என்னவாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்ப ட்டுள்ளது. உங்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டரில் ஏற்கனவே ஆபீஸ் 2007 இயங்கிக் கொண்டிருந்தால், அந்த கம்ப்யூட்டரில் ஆபீஸ் 2010 தொகுப்பினையும் இயக்கலாம். இப்போது கம்ப்யூட்டர் சந்தையில் விற்பனை செய்யப்படும் புதிய கம்ப்யூட்டர் ஒன்றினைத் தகுதியான நிறுவனத்திடமிருந்து பெற்றால், அந்த கம்ப்யூட்டரிலும் ஆபீஸ் 2010 இயக்கலாம். ஆனால் ஆபீஸ் 2003 மட்டுமே இதுவரை இயக்கிக் கொண்டிருந்தால், அந்தக் கம்ப்யூட்டரில் ஆபீஸ் 2007 தொகுப்பு இயங்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.


ஆபீஸ் 2010 – 32 பிட் பதிப்பு கீழ்க்காணும் 32 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டரில் இயங்கும். விண்டோஸ் எக்ஸ்பி + சர்வீஸ் பேக் எஸ்.பி.3., விஸ்டா எஸ்.பி.1., விண்டோஸ் 7, விண்டோஸ் சர்வர் 2008, விண்டோஸ் சர்வர் 2003 ஆர் 2 (எம்.எஸ். எக்ஸ்.எம்.எல். உடன்)

ஆபீஸ் 2010 –64 பிட் பதிப்பு 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அனைத்திலும் இயங்கும். விண்டோஸ் சர்வர் 2003 ஆர்2 சிஸ்டத்தில் மட்டும் இயங்காது.

ஆபீஸ் 2010 இயங்க குறைந்த பட்ச மற்ற தேவைகளாவன. 500 ஏத் ப்ராசசர் 256 எம்பி ராம் மெமரியுடன் இருக்க வேண்டும். ஹார்ட் டிஸ்க் 1 அல்லது 1.5 ஜிபி தேவைப்படும்.

ஆபீஸ் 2010 பதிப்பு ஆபீஸ் 2007 போல் இல்லாமல், கிராபிக்ஸ் கார்ட் திறன் தேவையிலும் வேறுபட்டு உள்ளது. எக்ஸெல் சார்ட், பிரசன்டேஷன் காட்சிகள் போல பைல்களுக்கு இந்த தேவை அவசியமாகிறது. குறைந்த பட்சம் மைக்ரோசாப்ட் DirectX 9.0c கிராபிக்ஸ் ப்ராசசர் 64 எம்பி வீடியோ மெமரியுடன் தேவைப்படும். ஆனால் பொதுவாக வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி, பெரும்பாலா னவர்கள் ஒவ்வொரு முறை ஆபீஸ் தொகுப்பு வெளியாகும் போதும், புதிய திறன் கொண்ட ஹார்ட்வேர் இணைந்த கம்ப்யூட்டர் வாங்க வேண்டுமா? என்று கேட்கின்றனர். இதை மனதில் வைத்து, கூடுமானவரை ஆபீஸ் 2007 இயங்கிய அதே ஹார்ட்வேர் தேவைகளுடன், ஆபீஸ் 2010 தொகுப்பும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மைக்ரோசாப்ட் நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.

கம்ப்யூட்டர் கிரா

இது அடிக்கடி நாம் கேட்கும் ஒரு சொல் தொடர். அது என்ன கம்ப்யூட்டர் கிராஷ் ஆவது? உங்கள் மீது மோதி நின்னு போச்சா! என்று சிலர் கேலி செய்வார்கள். கம்ப்யூட்டர் கிராஷ் ஆவது என்பது வேறு ஒன்றைக் குறிப்பிட்டாலும், நாம் எதிலாவது மோதி நின்றால், கவலைப்படுவதனைக் காட்டிலும் கம்ப்யூட்டர் கிராஷ் ஆனால் கவலைப்படுவோம். இல்லையா

அடிப்படையில் கம்ப்யூட்டர் கிராஷ் என்பது ஏதேனும் ஒரு அப்ளிகேஷன் புரோகிராம் அல்லது உங்கள் சிஸ்டம் புரோகிராமில் ஏதேனும் ஒரு பகுதி தன் வழக்கமான செயல்பாட்டினை மேற்கொள்ள முடியாமல் போவதுதான். இதனால் மற்ற புரோகிராம் அல்லது கம்ப்யூட்டரின் மற்ற செயல்பாடுகளும் முடங்கிப் போவதுதான். குறிப்பாக கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முக்கிய பகுதி இயங்காமல் முடங்குவது, கம்ப்யூட்டரின் செயல்பாடு முழுவதையும் நிறுத்தி விடும். எது காரணமாக இருந்தாலும், கம்ப்யூட்டர் கிராஷ் என்பது அடிக்கடி நடைபெறக் கூடிய ஒன்றாக இருக்கக் கூடாது. கம்ப்யூட்டர் கிராஷ் என்பதனை சிலர் சிஸ்டம் கிராஷ் என்றும் கூறுவார்கள்.

இன்டர்நெட் புள்ளி விபரங்கள் 2009

2009ல் இணையம்


நடந்து முடிந்த 2009ஆம் ஆண்டின் இன்டர்நெட் புள்ளி விபரங்கள் கிடைத்துள்ளன. மொத்தம் அனுப்பப்பட்ட இமெயில்கள் – 90 ட்ரில்லியன். நாளொன்றுக்கு சராசரியாக 24.7 கோடி இமெயில்கள் அனுப்பப்பட்டன. உலக அளவில் 140 கோடி பேர் இமெயில்களைப் பயன்படுத்தினர். இந்த ஆண்டில் புதிதாய் இமெயில் அனுப்பி யவர்கள் 10 கோடி. மொத்த இமெயில்களில் குப்பையாக மொத்தமாக அனுப்பப்பட்டவை 81சதவீதம். ஆண்டின் இறுதியில் இந்த ஸ்பேம் மெயில்கள் 92 சதவீதம் வரை உயர்ந்தன. சென்ற ஆண்டு மட்டும் ஸ்பேம் மெயில்களின் எண்ணிக்கை 24 சதவீதம் உயர்ந்திருந்தது. நாளொன்றுக்கு ஏறத்தாழ 20,000 கோடி ஸ்பேம் மெயில்கள் அனுப்பப்பட்டன. டிசம்பர் இறுதியில் மொத்தம் 23.40 கோடி இணையதளங்கள் இருந்தன. இவற்றில் 4.7 கோடி இணையதளங்கள், 2009ல் உருவாக்கப்பட்டவை. மொத்த தளங்களில் .COM என்ற வகை தளங்கள் 8.18 கோடி, .NET என்ற பெயரில் 1.23 கோடி, .ORG என்ற வகையில் 78 லட்சம், .IN போன்ற நாட்டின் துணைப் பெயர்களில் 7,63 கோடி இருந்தன. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இன்டர்நெட் பயன்படுத்து வோர் எண்ணிக்கை 18% உயர்ந்திருந்தது. ஆசியா – 73,82,57,230, ஐரோப்பா – 41,80,29,796, அமெரிக்கா 25,29,08,000, கரிபியா, லத்தீன் அமெரிக்க நாடுகள் – 17,90,31,479, ஆப்பிரிக்கா – 6,73,71,700, மத்திய கிழக்கு நாடுகள் – 5,74,25,046, ஆஸ்திரேலியா, ஓசியானியா நாடுகள் – 2,09,70,490. பிளாக்குகள் எனப்படும் சிறிய வலை மனைகளின் எண்ணிக்கை 2009 ஆம் ஆண்டில் 12.6 கோடி. ஆண்களைக் காட்டிலும் பெண்களின் வலைமனை 84 சதவீதம் கூடுதலாகும். பேஸ்புக் தளத்தில் உள்ள மக்களின் எண்ணிக்கை 35 கோடி. இவர்களில் 50சதவீதம் பேர் நாள்தோறும் இதனைப் பயன்படுத்தினர். 5 லட்சம் பேர் தொடர்ந்து பயன்படுத்து பவர்களாக இருந்தனர். 2009 டிசம்பரில் பிரவுசர் பயன்பாடு கீழ்க்குறித் தபடி இருந்தது. இன்டர்நெட் எக்ஸ் புளோரர் – 62.7சதவீதம், பயர் பாக்ஸ் 24.6 சதவீதம், குரோம் 4.6 சதவீதம், சபாரி 4.5சதவீதம், ஆப்பரா 2.4 சதவீதம், மற்றவை 1.2 சதவீதம்.

ஏசர் மொபைல் ஸ்மார்ட் போன்

லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இயங்கும் ஏசர் நிறுவனத்தின் மொபைல் போன்கள் அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. உலகின் முதல் ஆண்ட்ராய்ட் 1.6 ஹை டெபனிஷன் போனாக, ஏசர் நிறுவனத்தின் லிக்விட் மொபைல் ஸ்மார்ட் போன் வந்துள்ளது. குவால்காம் ஸ்நாப்ட்ராகன் (1GHz) என்ற ப்ராசசருடன் வந்துள்ள முதல் மொபைல் போனும் இதுவே. இதில் 3.5 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன் 480 x 800 பிக்ஸெல்களுடன் தரப்பட்டுள்ளது. ஜியோ டேக்கிங் இணைந்த 5 எம்பி கேமரா, ஆட்டோ போகஸ், எல்.இ.டி. பிளாஷ், ஆக்ஸிலரேட்டர், செல்ப் டைமர், 2560 x 1920 ரெசல்யூசனுடன் தரப்பட்டுள்ளது. புளுடூத், வை–பி, ஏ.ஜி.பி.எஸ். (AGPS) தொழில் நுட்பம் இன்டர்நெட் நெட்வொர்க் இணைப்பிற்கு துணைபுரிகின்றன. 3G/GSM/GPRS/EDGE நெட்வொர்க் தொழில் நுட்பம் இயங்குகின்றன. வை–பி, புளுடூத் ஆகியவையும் தரப்பட்டுள்ளன. உள்நினைவகம் 256 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். 1350 mAh பேட்டரி தொடர்ந்து ஐந்து மணி நேரம் பேசிட வழி தருகிறது.


இந்த போனின் தனிச் சிறப்பாக இதன் மூன்று ஹோம் ஸ்கிரீனைக் குறிப்பிடலாம். இதனால் பயன்படுத்தும்போது ஒவ்வொரு ஸ்கிரீனிலும் வெவ்வேறு விட்ஜெட்டுகளை அமைக்கலாம். இதன் வீடியோ ஸ்ட்ரீமிங் திறன் மிக அருமையான மல்ட்டிமீடியா அனுபவத்தினைத் தருகிறது. வெள்ளை, கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களில் உள்ள இந்த போன் ஸ்டைலான வளைவுகளுடன் ஸ்லிம்மாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் குறியீட்டு விலை ரூ.24,900. இது சராசரி இந்திய விலையைக் காட்டிலும் கூடுதல் என்பதால், பல சலுகைத் திட்டங்களை எதிர்பார்க்கலாம்.

Samsung B5722

இரண்டு சிம்களில் இயங்கும் டச் ஸ்கிரீன் வரிசையில், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் புதிய மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. Samsung B5722 என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த போனில், சிம்கள் பயன்படுத்து வதன் நேரத்தினை, அவற்றின் கட்டணத்திற்கேற்ப வரையறை செய்து கொள்ளலாம். ஒரே டச் கீ மூலம் ஆறு விட்ஜெட்களை இயக்கும் திறன், ஆறு நெட்வொர்க் தரும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர்களைப் பயன்படுத்தும் வசதி ஆகியவை இந்த போனில் குறிப்பிடத்தக் கவையாகும். இதன் திரை 2.8 அகலத்தில் உள்ள தொடுதிரையாகும். இமேஜ் எடிட்டர் வசதியுடன் 3 எம்.பி. கேமரா, புளுடூத், ஹை ஸ்பீட் யு.எஸ்.பி., 8 ஜிபி வரை நீட்டிக்கும் வகையில் மெமரி, 13.4 மணி நேரம் பேசும் திறன் தரும் 1200 mAH பேட்டரி தரப்பட்டுள்ளன. இதன் எப்.எம். ரேடியோ ஒலி பரப்பினை மற்ற வேலைகளை இந்த போனில் மேற்கொள்கையில் பின்னணி இசையாகக் கேட்டு மகிழலாம். இதில் இரண்டு சிம்களையும் இணைத்து ஒரு நவீன மொபைல் ட்ரேக்கர் முதல் முதலாகத் தரப்பட்டுள்ளது. இதன் குறியீட்டு விலை ரூ. 11,680.,,,,,,

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

அழகியே படங்கள்


காதலர் தினம்

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?


சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை



படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன?

பாலில் ஊறிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன?



முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்

சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை



கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட

கடலின் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட

எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கமென்ன

விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன?



முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?

சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை



ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன?

அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன?

மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலையாவதென்ன?

வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன?



முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்

சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை

திங்கள், 8 பிப்ரவரி, 2010

ஓவியம் தீட்டலாம்….

எந்த நிறம் வண்ணத்துப் பூச்சியிடம் இருக்கிறதோ,


அதை அப்படியே தொட்டு உங்கள் காகிதத்தில் வரையக் கூடிய தொழில் நுட்பம் வந்திருக்கிறது.



கொரியாவிலுள்ள ஜின்சன் பார்க் என்பவர் கண்டுபிடித்திருக்கும் இந்த புதிய தொழில் நுட்ப பேனா

எந்தப் பொருளிலும் உள்ள நிறத்தை ஸ்கேன் செய்து அதற்குரிய RGB அளவீடுகளை அறிந்து

பேனாவில் மையைத் தானே தயாரித்துக் கொள்கிறதாம்.

இனிமேல் கவலையில்லை,

காதலியின் கன்னத்தைத் தொட்டே ஓவியம் தீட்டலாம்….

இலவசமாக பேசிக்கொள்ள

உலகத்தின் இருமூலைகளில் இருக்கும் இரு கணினிகள் – அவை இணையத்தில் இணைக்கப் பட்டிருந்தால் நாம் குரல்வழி ( voice chat) மூலம் எளிதாக இலவசமாக பேசிக்கொள்ள முடியும். இது நாம் யாவரும் அறிந்த பழைய தொழில்நுட்பமே.
அந்த மாதிரியான குரல்வழி ( voice chat) இணைப்புக்கு MSN Messenger, Yahoo Messenger ,Google Talk, ICQ, Skype முதலான மென்பொருட்கள் உதவுகின்றன. அப்படியே அது வழியாய் நாம் சர்வதேச இலவச அழைப்புக்களும் செய்யலாம். ஆனால் என்ன இரு முனைகளிலும் கணினி மற்றும் இணையம் உங்களுக்குத் தேவைப்படும். கணினி பக்கத்திலேயே அமர்ந்திருக்க வேண்டும்.அதுவும் ஒரு தொல்லைதானே !
இன்றைக்கு வெளிவரும் பெரும்பாலான கையடக்கத்தொலைப்பேசிகள் ( mobile phone’s) ஒரு குட்டி கணினி போலவே செயல்படுகின்றன. அது வழியாய் இணையம் கூட மேயமுடிகின்றது.

USA இல் இருந்து i-phone வழி Yahoo Messenger-ல் நுழைந்து லண்டனில் உள்ளவருக்கு N95 வழி Yahoo Messenger இன் மூலம் இருவரும் மணிக்கணக்கில் voice chat-ல் பேசிக்கொண்டே இருக்கலாம். இது சர்வதேச அழைப்பாகாது. அதாவது இங்கு நாங்கள் பேசும் போது தொலைப்பேசி நுட்பத்தை (Air time) பயன்படுத்தவில்லை. மாறாக VOIP எனப்படும் இணைய வழி தொடர்பையே பயன்படுத்துகின்றோம். இது உங்கள் Data Plan meter தான் கூட்டுமே தவிர தொலைப்பேசி கட்டணத்தைல்ல.
அமெரிக்காவில் AT&T “unlimited” Data Plan-னை மாதம் குறைந்த கட்டணத்தில் தருகின்றார்கள். Data Plan கட்டண கவலையின்றி மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருக்கலாம்.
ஒரு தகவலுக்கு எடுத்துக்கொண்டால் ஐபோன் ( iphone) வழி ஒருமணி நேரம் பேசினால் 8MB data மட்டுமே பரிமாற்றம் (transfer) ஆகியிருக்குமாம்.
இலங்கையில் Dialog, Mobital, Airtel,Tigo இணைப்புக்கள் 1KB க்கு 2 சதம் என்ற அடிப்படையில் கட்டணங்ளை அறவிடுகின்றன.
இணைய இணைப்புடன் கூடிய கைப்பேசி இந்தியாவில் உங்களிடம் இருந்தால் நீங்களும் இலவச சர்வதேச அழைப்புக்களை மேற்கொள்ளலாம் .மறுமுனை நபரிடமும் இணைய இணைப்புடன் கூடிய கைப்பேசி இருக்கவேண்டும்.அது 3G, GPRS, WiFi அல்லது EDGE என எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.
இது ஒரு அருமையான தந்திரம். சர்வதேச தொலைபேசி சேவை நிறுவனங்கள் பல தொலைபேசி அட்டைகள் கோடிகோடியாய் பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கும் போது இதை எப்படி சம்மாளிக்கப்போகின்றார்கள் என தெரியவில்லை.
மேற்கண்ட தந்திரத்தை செய்ய உதவும் மென்பொருளின் பெயர் fring. ( VoIP over 3G, GPRS and WiFi networks)

உங்கள் கைப்பேசிக்கான சரியான fring மென்பொருளை இலவசமாக இங்கிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம். http://www.fring.com/download/
fring ஆனது Skype®,Facebook, MSN® Messenger, ICQ®, Google Talk™, Twitter, AIM® , Yahoo!™, Last.fm போன்றவற்றை ஆதரிக்கிறது.

நீங்களும் இனி Skype தொலைபேசி உரையாடல்களை கையடக்கதொலைபேசியினுடாக ( mobile phone) செய்யலாம்.

இது peer-to-peer VoIP தொழிநுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இப்பொழுது Twitter 2.0 க்கு இசைவாக நடக்கும் வகையில் ( new Twitter 2.0 Add-on for fring) இருக்கிறது.
டியுட்டரில் ( Twitter ) செய்திகள் வரும் போது ஒலியை தந்து ( ringing tone) நினைவூட்டுகிறது.
டியுட்டரில் ( Twitter ) செய்திகளை கையடக்க தொலைபேசி இரண்டு விதமாக கையாளுகிறது.
1. விண்டோஸ் மொபைலில் fring இல் உள்ள Add-ons பகுதிக்கு சென்று பழைய Twitter ஐ unsubscribe செய்து பின்னர் re-subscribe செய்யவும்.
( Windows Mobile- just go to the Add-ons tab inside fring, unsubscribe from the old Twitter & re-subscribe to the new Add-on. )
2. Symbian மென்பொருளில் இயங்கும் கையடக்கதொலைபேசிகளில் ( e.g :Nokia, Sony Ericsson, Samsung) புதிய fring மென்பொருளை தரையிறக்கி ( download ) பழைய Twitter ஐ unsubscribe செய்து பின்னர் re-subscribe செய்யவும்.
( Symbian handset owner, simply download the new fring version 3.37 first, unsubscribe from the old Twitter & re-subscribe to the new Add-on)
http://www.fring.com/download/  முயற்சி செய்து பாருங்கள் நண்பர்களே!

கிரிக்கெட் திருவிழா

மீண்டும் ஒரு கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 12 முதல் இந்தியாவில் தொடங்க இருக்கிறது. இந்த திருவிழாவினை சோனி மேக்ஸ் டிவி சேனல் இந்தியாவில் ஒளிபரப்ப இருக்கிறது. இந்த சேனல் இல்லாத கேபிள் வைத்திருப்பவர்கள் கிரிக்கெட் போட்டியை இன்டர்நெட்டிலேயே கண்டு மகிழலாம். இதற்கான ஒப்பந்தம் ஒன்றை கூகுள் இந்தியா நிறுவனமும் ஐ.பி.எல். அமைப்பும் அண்மையில் ஏற்படுத்திக் கொண்டுள்ளன. http://www.youtube.com/ipl என்ற ஒரு தனி இணைய தளம் ஒன்று இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் ஐ.பி.எல். போட்டிகள் குறித்த தகவல்களுக்கான ஆன்லைன் உரிமையை இரண்டு ஆண்டுகளுக்குக் கொண்டிருக்கும். தள ஒளிபரப்பு மூலம் கிடைக்கும் விளம்பரம் மற்றும் ஸ்பான்ஸார்ஷிப் வருமானத்தினை கூகுள் மற்றும் ஐ.பி.எல். பகிர்ந்து கொள்ளும்.


கூகுள் முதல் முறையாக ஒரு பெரிய அளவிலான கிரிக்கெட் போட்டியை லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் தன் தளத்தில் ஒளி பரப்ப இருக்கிறது. 45 நாட்களில் நடைபெறும் 60 போட்டிகள் ஒளி பரப்பப்படும். போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு மட்டுமின்றி, ரசிகர்களுக்கு போட்டிகளின் ஹை லைட்ஸ், விளையாட்டு வீரர்களுடனான பேட்டிகள், விக்கெட் வீழ்ச்சி, டாப் சிக்ஸ், பரிசு வழங்கும்விழா, பிட்ச் குறித்த அறிக்கை என இன்னும் பல சிறப்பு ஒளிபரப்புகளும் இருக்கும். இவற்றை ரசிகர்கள் அந்த நேரத்தில் பார்க்க முடியவில்லை என்றாலும், எப்போது வேண்டு மானாலும் தளத்திலிருந்து பார்க்க முடியும் என்பது இதன் சிறப்பாகும்.

இவற்றுடன் இன்னொரு சிறப்பான ஏற்பாட்டி னையும் கூகுள் மேற்கொள்கிறது. இந்த போட்டிக்கென ஸ்பெஷல் ஆர்குட் தளம் ஒன்றை அமைக்கிறது. இதன் மூலம் ரசிகர்கள், விளையாட்டு வீரர்களுடன், குறிப்பாக மேன் ஆப் த மேட்ச் ஆகத் தேர்ந்தெடுப்பவர்களுடன் சேட்டிங்கில் ஈடுபடலாம். இவர்களுடன் மட்டுமின்றி போட்டிகளுடன் தொடர்பு டைய அனைவருடனும் சேட் செய்து மகிழலாம்.

இப்போதே இவற்றைத் திட்டமிட விரும்புபவர்கள் http://webtrickz.com/ipl3schedule என்ற முகவரியில் உள்ள தளம் சென்று, ஐபிஎல் போட்டி கால அட்டவணையைப் பெற்றுக் கொள்ளலாம். வரும் மாதங்களில் அலுவலகங்களில் கம்ப்யூட்டர் களில் தங்கள் அலுவலக சர்வர்களில் பணிபுரிபவர்கள், கூடுதலாக ஐ.பி.எல். கூகுள் தளங்களையும் திறந்து வைத்துப் பார்த்துக் கொண்டே பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்

ஜிமெயிலில்

இன்று உலக அளவில் இமெயில் பயன்படுத்தும் அனைவரும் ஜிமெயிலில் அக்கவுண்ட் வைத்து பயன்படுத்தி வருகின்றனர். அதனை மட்டுமே நம்பி இருப்போர் பெரும்பாலான எண்ணிக்கையில் உள்ளனர். அதனை அவ்வளவாகப் பயன்படுத்தாதவர்களும், ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை வைத்து எப்போதாவது பயன்படுத்தி வருகின்றனர். எனவே ஜிமெயில் சர்வீசஸ் திடீரென முடங்கிப் போனால், கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் பதறிப் போய்விடுவார்கள்; அது சரியாகிக் கிடைக்கும் வரை புலம்பித் தவித்துவிடுவார்கள். ஆனால் கூகுள் மெயிலை வேறு சில வழிகளிலும் பெறலாம் என்பதைப் பலர் அறிந்திருப்பதில்லை. இங்கு அந்த வழிகளைக் காணலாம்.


கூகுள் மெயில் மூன்று வழிகளில் இயங்குகிறது. அவை ஸ்டாண்டர்ட், எச்.டி.எம்.எல். மற்றும் மொபைல் (standard, HTML and mobile) ஸ்டாண்டர்ட் வகையில் எர்ரர் காட்டப்பட்டு பிரச்னை இருந்தாலும், மற்ற இரண்டு வகைகள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும். பெரும்பாலான நேரங்களில் ஸ்டாண்டர்ட் வகை தான் சிக்கலில் மாட்டிக் கொண்டு நமக்குக் கிடைக்காமல் இருக்கும். எனவே அந்த வேளைகளில் எப்படி மற்ற வகைகளில் ஜிமெயிலைப் பெறலாம் என்று பார்க்கலாம்.

முதலாவதாக எச்.டி.எம்.எல். வகையில் சென்று பெறுவது. இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி  http://mail.google.com/mail/?ui=html இது ஸ்டாண்டர்ட் வகைக்கு மாற்றானதாக இருக்கும். படங்கள் ஏதுமின்றி மிகவும் சாதாரணத் தோற்றத்தில் கிடைக்கும். இந்த இணைய முகவரியை உங்கள் புக்மார்க் / பேவரிட் தளப் பட்டியலில் வைத்துக் கொண்டால், ஸ்டாண்டர்ட் ஜிமெயில் பிரச்னைக் குள்ளாகுகையில் இதனைப் பயன்படுத்தலாம்.

இரண்டாவதாக, கூகுள் மெயிலின் மொபைல் பதிப்பை நாடுவது. இது நம் மொபைல் போன்களுக்கானது. இதனை உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பெறலாம். இதனைப் பெற உங்கள் பிரவுசரின் அட்ரஸ் பாரில் m.gmail.com என டைப் செய்திட வேண்டும். இதன் வடிவமும் எலும்புக் கூடு போலக் காட்சி அளிக்கும். ஆனால் இது டெக்ஸ்ட் மட்டுமே காட்டுவதால், விரைவில் உங்கள் மெயில்கள் கிடைக்கும். இதனைப் பார்த்து நீங்கள் அசௌகரியப்பட்டால், ஐபோனுக்கான கூகுள் மெயில் தளத்தினைப் பெறலாம். இதனைப் பெற  http://mail.google.com/mail/x/gdlakb/gp/ / என்ற முகவரியினை டைப் செய்திடவும். இறுதியாக நமக்குக் கிடைக்கும் ஐகூகுள் (டிஎணிணிஞ்டூஞு) வசதி. நீங்கள் டிஎணிணிஞ்டூஞு பயன்படுத்தாதவராக இருந்தாலும் அதன் தளத்தின் மூலம் ஜிமெயில்களைப் பெறலாம். இன்னும் சொல்லப் போனால், ஐ கூகுள் தளத்தில் மூலம் நீங்கள் உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் முழுவதும் காண முடியும். ஜிமெயில் மட்டுமே பயன்படுத்தும் அனைவருக்கும் ஐ கூகுள் மிகச் சிறந்த தளமாகும். இதனைப் பெற  http://www.google.com/ig/gmailmax என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். மேலே காட்டப்பட்டுள்ள நான்கு வழிகளிலும் நீங்கள் உங்கள் ஜிமெயிலைப் பெறலாம். சரி, இந்த நான்கு வழிகளிலும் பெற முடியவில்லை என்றால் என்ன செய்வது? உங்கள் டெஸ்க் டாப் மெயில் கிளையண்ட் புரோகிராம்களை நாடவேண்டியதுதான். போன்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும் நமக்கு இந்த வகையில் உதவிடும். ஜிமெயில் சர்வரை இந்த புரோகிராம்கள் அணுகி, மெயில்களைப் பெற நிச்சயம் உங்களுக்கு இது உதவும். இதற்கு எப்படி செட் செய்வது என்ற வழியை  http://mail.google.com/support /bin/answer.py?hl=en&answer=12103 என்ற முகவரியில் உள்ள கூகுள் தளம் உங்களுக்குப் படிப்படியாக விளக்கும். எனவே ஜிமெயில் என்றைக்கும் எப்போதும் கை கொடுக்கும் என்பதே இன்றைய நிலை.

விண்டோஸ் வேகமாக

விண்டோஸ் – என்னதான் வேகமாக இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருந்தாலும், சில வேலைகளை மேற்கொள்கையில் தொடர்ந்து எந்த மாற்றமும் இன்றி அதே பாணியில் தான் இயங்கும். எடுத்துக் காட்டாக வெல்கம் ஸ்கிரீன், ஸ்டார்ட் அப் புரோகிராம்களைக் கொண்டு வருதல், சிஸ்டம் ஷட் டவுண் செய்தல் ஆகியவற்றைக் கூறலாம். இந்த வேலைகளில் சிஸ்டம் பைல்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வேகம் தரும் சில புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் இலவசம் தான். இந்த புரோகிராம்கள் குறித்த தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.


1. ஸ்டார்ட் அப் டிலேயர் (Startup Delayer): அடிக்கடி புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், பல வேளைகளில் என்ன செய்கிறோம் என்று அறியாமல், அவற்றை ஸ்டார்ட் அப் லிஸ்ட்டில் வைத்து விடுகிறோம். இதனால் ஸ்டார்ட் அப் புரோகிராம் எண்ணிக்கை அதிகமாகிறது. விண்டோஸ் இயக்கம் நிலைக்கு வர நேரமாகிறது. ஸ்டார்ட் அப் டிலேயர் என்னும் இந்த புரோகிராம், ஸ்டார்ட் அப் லிஸ்ட்டில் உள்ள புரோகிராம்களை, ""நீங்கள் எல்லாம் கொஞ்சம் பொறுமையா இருங்க, அப்புறமா வாங்க'' என்று சொல்லி விண்டோஸ் இயக்கத்தினை அமல்படுத்து கிறது. இதனால் உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கி மேலும் பணிகளை எடுத்துக் கொள்ள தயாராகிறது. இந்த நிலை வந்த பின்னர், ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் ஏற்றப்படும்.

ஸ்டார்ட் அப் டிலேயரை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன், உங்கள் சிஸ்டத்தில் உள்ள அனைத்து ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் அனைத்தையும் இது பட்டியலிட்டுக் காட்டுகிறது. இவற்றில் எதனை எல்லாம் தாமதமாகக் கொண்டு வரலாம் என்று கருதுகிறீர்களோ, அவற்றை இழுத்து வந்து கீழாக உள்ள வெள்ளை பாரில் விட்டுவிட வேண்டும். குறிப்பிட்ட அப்ளிகேஷனைக் காட்டும் கோடு ஒன்று அங்கு காணப்படும். தாமதம் அதிகமாக இருக்க வேண்டுமா அல்லது குறைவாக இருக்க வேண்டுமா என முடிவு செய்து, அதற்கேற்ப அந்த கோட்டை இழுத்துவிடலாம்.

இந்த இலவச புரோகிராமினை  http://www.pcworld.com/article/151952/boot_   faster_with_startup_delayer.html என்ற முகவரி யில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இது விண்டோஸ் 7 தொகுப்பிலும் இயங்கும்.

2. குரோம் (Chrome) மாறலாமா?: உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் மிக அதிகம் பயன்படுத்தப் படும் புரோகிராம் எது? தயக்கமின்றி இன்டர்நெட் பிரவுசர் என்று சொல்லலாம். வேகமாக இன்டர்நெட் பிரவுசிங் செய்திட வேண்டு மென்றால், அடிப்படையில் வேகமான இன்டர்நெட் இணைப்பு வேண்டும். அதன் பின் வேகமாக இயங்கும் பிரவுசர் வேண்டும். வேகம் மட்டுமே உங்கள் இலக்காக இருக்கும் பட்சத்தில், நீங்கள் குரோம் பிரவுசரை இன்ஸ்டால் செய்து இயக்கலாம். வேகத்தைப் பொறுத்தவரை, குரோம், பயர்பாக்ஸ் 3.5, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8, ஆப்பரா 10, சபாரி என வரிசையில் இடம் பெறுகின்றன.

3. பவர் செட்டிங்ஸ் (Power Settings): பெர்சனல் கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, அதன் இயக்க தன்மையை மெதுவாக்கி, அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைத்து மின்சாரத்தை மிச்சப்படுத்தப் போவதில்லை. ஏனென்றால் அது பேட்டரியில் இயங்கவில்லை. எனவே கம்ப்யூட்டர் மேற்கொள்ளும் ஒவ்வொரு வேலையையும் அதிக பட்ச திறன் கொண்டு இயங்கும் வகையில் அமைப்பது நல்லது. இதற்கென விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா டிபால்ட்டாக ஒரு பேலன்ஸ்டு
(‘Balanced’)
பெர்பார்மன்ஸ் என்ற நிலையைக் கொண்டுள்ளன. இதனை இன்னும் கொஞ்சம் ஊக்குவிக்க ஒரு சிறிய வேலையைச் செய்யலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து கிடைக்கும் ரன் கட்டத்தில் பவர் (Power) என டைப் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Power Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Higher Performance என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது அங்கே உள்ள பட்டியலில் இல்லை என்றால் Show Additional Plans என்பதைக் கிளிக் செய்திடவும். இதிலும் ஒவ்வொரு பகுதியாக, எடுத்துக்காட்டாக, ஹார்ட் டிரைவ் ஷட் டவுண் செய்திடும் முன் எவ்வளவு நேரம் சுழலாமல், வேலை செய்யாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற செட்டிங்ஸ் அமைக்க வேண்டும் என்றால் Change plan settings, Change advanced power settings என்பனவற்றைக் கிளிக் செய்திடவும்.

4. புரோகிராம் நீக்கம்: பெர்சனல் கம்ப்யூட்டர்களை வாங்குகையில், அதனைத் தயாரிக்கும் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர் களுக்குப் பயனளிக்கும் என்று எண்ணுகின்ற பல புரோகிராம்களை பதிந்து அனுப்புகின்றனர். இவை ஹார்ட் டிரைவ் இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கும். சில ஸ்டார்ட் அப் லிஸ்ட்டில் இருந்து கொண்டு ராம் மெமரியைக் காலி செய்திடும். எனவே இவற்றை நீக்கலாம். இதற்கு கண்ட்ரோல் பேனல் சென்று ஆட்/ரிமூவ் பிரிவைப் பயன்படுத்தி நீக்கலாம். அல்லது ஏற்கனவே இந்த பகுதியில் எழுதப்பட்ட Revo Uninstaller போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். இது போன்ற புரோகிராம்கள், தேவையற்ற புரோகிராம்களை நீக்குவதுடன், ஏற்கனவே நீக்கப்பட்ட புரோகிராம்கள் தொடர்பான சிறிய பைல்களையும் அறவே காலி செய்திடும்.

5. வெப் ஆப் ட்ரஸ்ட் (Web of Trust):இந்த புரோகிராம் விண்டோஸ் தொகுப்பினை ட்யூன் செய்யாது என்றாலும், அதனைப் பாதுகாக்கும் வேலையைச் செய்கிறது. பலமுறை இன்டர்நெட் தளங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்து, வைரஸ் மற்றும் மால்வேர்களிடம் நம் கம்ப்யூட்டர்கள் மாட்டிக் கொள்கின்றன. எப்படி லிங்க் ஒன்று மோசமாக நம்மை மாட்டிவிடும் மால்வேர் புரோகிராம்களைக் கொண்டுள்ளது என்று தெரிந்து கொள்வது? அதற்கான வழிதான் வெப் ஆப் ட்ரஸ்ட் என்னும் புரோகிராம். இது இலவசமாகக் கிடைக்கிறது. இது ஒரு ஆட் ஆன் தொகுப்பாக இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கும் பயர்பாக்ஸுக்கும் கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால், இது ஒவ்வொரு லிங்க்கிற்கும் பச்சை (பாதுகாப்பானது), மஞ்சள் (ஆபத்து இருக்கலாம்) மற்றும் சிகப்பு (உறுதியாக ஆபத்தானது) என்றபடி வண்ண ஐகான்களை வழங்கும். அல்லது லிங்க்கின் மீது ரைட் கிளிக் செய்து, அங்கு கிடைக்கும் மெனுவில் View WOT scorecard என்பதைத் தேர்ந்தெடுத்து நாமாக சோதித்துக் கொள்ளலாம்.

ஒரு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எப்போது நமக்கு எளிதானதாகவும், உற்ற தோழனாகவும் தெரியும்? அது நாம் எதிர்பார்க்கும் வேலையை, குறித்த காலத்தில் செய்து கொடுக்கும் போது, இல்லையா! இதற்கு உங்கள் விண்டோஸ் தொகுப்பைச் சற்று ட்யூன் செய்திடலாம்.

1.குளோஸ் ஆல் விண்டோஸ் (Close All Windows): கம்ப்யூட்டரில் அன்றைக்கான வேலையை முடித்துவிட்டீர்கள். ஷட் டவுண் செய்திடும் முன் திரையில் அதிக எண்ணிக்கையில் புரோகிராம்கள் திறந்து இருப்பது தெரிகிறது. ஒவ்வொன்றாக மூட வேண்டும்; சற்று எரிச்சல் தான். இதற்காகவே குளோஸ் ஆல் விண்டோஸ் என்ற புரோகிராம் கிடைக்கிறது. இதனை பதிந்து டாஸ்க் பாரில் போட்டு வைத்திடுங்கள். பின் இதனைக் கிளிக் செய்தால், அனைத்து புரோகிராம்களும் ஒரு பிளாஷ் மாதிரி மூடப்படும். ஏதேனும் ஒரு புரோகிராமில் பைல் சேவ் செய்யப்பட வேண்டி இருந்தால், உங்களைக் கேட்டு டயலாக் பாக்ஸ் தரப்பட்டு வழக்கம்போல சேவ் அழுத்த வேண்டியதிருக்கும்.

2. டாஸ்க் பார் ஓரத்தில்: இப்போதெல்லாம் அகலமான எல்.சி.டி. திரை கொண்ட மானிட்டரை அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். இதில் இடது வலது ஓரங்களில் சிறிது இடம் விட்டு மற்ற இடங்களில் விண்டோக்கள் கிடைக்கின்றன. ஏன், இதனையும் பயன்படுத்தலாமே. முழுவதுமாக விண்டோ காணப்பட்டாலும், நமக்கு புரோகிராம்களில் மேல் கீழாகத்தானே இடம் தேவைப்படும். எனவே கீழே உள்ள டாஸ்க் பாரை, ஓரத்திற்குக் கொண்டு செல்லலாமே. முதலில் கீழேயே வைத்துப் பார்த்துப் பயன்படுத்திய கண்களுக்கு சற்று வித்தியாசமாகத்தான் தெரியும். பழகிவிட்டால் சரியாகிவிடும். நமக்கு புரோகிராம்களில் வேலை செய்திட அதிக இடம் கிடைக்கும்.

இதற்கு டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Lock the taskbar என்று இருப்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அடுத்து, டாஸ்க் பாரில் உள்ள காலி இடத்தில் இடது கிளிக் செய்து அப்படியே இழுத்து இடது அல்லது வலது பக்கம் கொண்டு விட்டுவிடவும். ஓரத்திற்கு சென்றவுடன் டாஸ்க் பார் இறுத்திக் கொண்டு விடும். பின் மவுஸை அழுத்தி இருப்பதை எடுத்துவிடவும்.

கீப் பாஸ் (KeePass):

கீப் பாஸ் (KeePass): எத்தனை பாஸ்வேர்ட் களைத்தான் நினைவில் வைத்திருப்பது? கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி இது. அவர்களுக்காகவே இந்த ஓப்பன் சோர்ஸ் புரோகிராம் உதவுகிறது. இதற்கான மாஸ்டர் பாஸ்வேர்டை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும். பிற பாஸ்வேர்ட்களை இந்த புரோகிராம் நினைவில் வைத்து உங்களுக்கு உதவும். கிடைக்கும் தளம்:  http://keeppass.info/

சென்ற ஆண்டில் இலவசமாகக் கிடைத்த,

இலவசமாகக் கிடைத்த, எளிய ஆனால் பயன் அதிகம் தந்த சில புரோகிராம்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இன்னும் இவை பற்றி அறியாதவர்கள், இவற்றை இறக்கி இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.


1.வி.எல்.சி (VLC): மீடியா பிளேயர்களுக்கான புரோகிராம். மீடியாவில் எந்த பார்மட்டில் ஒரு பைலைக் கொடுத்தாலும் அதனை இயக்கும். வீடியோ பைல்களை, ஐபாட் சாதனத்திற்கேற்ற வகையில் மாற்றித்தரும். சிடி, டிவிடிக்களைப் பிரித்து சிறிய பைல்களாக மாற்றித்தரும். கிடைக்கும் தளம் : http://www.videolan.org/vlc/

2. பாக்ஸ் இட் ரீடர் (FoxIt Reader): அடோப் ரீடர் தொகுப்பின் இடத்தில் வைத்துப் பயன்படுத்தக் கூடிய சிறிய பி.டி.எப். ரீடர் புரோகிராம். விண்டோஸ், விண்டோஸ் மொபைல், லினக்ஸ் மற்றும் பிற சிஸ்டங்களுக்கும் கிடைக்கிறது. கிடைக்கும் தளம்: http://www.foxitsoftware.com/pdf/reade



3. பிட்ஜின் அண்ட் அடியம் (Pidgin and Adium): இந்த இரண்டும் இன்ஸ்டன்ட் மெசேஜ் கிளையண்ட் புரோகிராம்ஸ். பிட்ஜின் விண்டோஸ் சிஸ்டத்திலும், ஏடியம் மேக் சிஸ்டத்திலும் இயங்கும். சிறிய எளிதான புரோகிராம். கிடைக்கும் தளம்: http://adium.im



4. இர்பான் வியூ (IrfanView) : மிக விரைவாக போட்டோக்களைப் பார்ப்பதற்கும், எடிட் செய்வதற்கும் உரிய சிறிய புரோகிராம். இதில் அதிகமான எண்ணிக்கையில் கீ போர்ட் ஷார்ட் கட்களைப் பயன்படுத்தலாம். கிடைக்கும் தளம்:  http://www.irfanview.com/
5. பயர்பாக்ஸ்: சென்ற ஆண்டில் மிக அதிகமாக டவுண்லோட் செய்யப்பட்ட பிரவுசர் புரோகிராம். இது பற்றி ஒவ்வொரு இதழிலும் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது. கிடைக்கும் தளம்:  http://www.mozilla.com/enUS/firefox/personal.html
6. செவன் ஸிப் (7Zip): பைல்களைச் சுருக்க, விரிக்க உதவிடும் புரோகிராம். அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம். பல்வேறு ஸிப் பைல் பார்மட்களைக் கையாள்கிறது. கிடைக்கும் தளம்:  http://www.7zip.org/

வியாழன், 21 ஜனவரி, 2010

காம கண்ணாடி



இந்திரவிழா நமீதாவின் குளியல் விழா என்று இப்படத்திர்க்கு பெயர்


சூட்டி விழா கொண்டடி இருக்களாம் ஏனோ தவரான பெயர் வைத்து விட்டார் படமுழுக்க குளியல் காள்சிகளை நம்பி எடுக்க படம் காமம் ததும்பும் விழிகளுடன் நமீதா குளித்து வரும் போது

கண்கள் கான கூஸ்சும் வண்ணம் உள்ளது வாலிப பட்டாழங்ககளுக்கு கவர்ச்சி படம் பூத கண்ணாடி கொண்டு தேடுங்கள் ஆடையேய் காம கண் கொண்டு பாருங்கள் படத்தை

தனிய பாருங்கள் குடும்பத்துடன் அல்ல!

செவ்வாய், 19 ஜனவரி, 2010

கம்ப்யூட்டர் சிஸ்டத்தில்

கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் சிறிய பிரச்னைகள் ஏற்படுகையிலும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கையிலும், நமக்குக் கிடைக்கும் அறிவுரை எம்.எஸ். கான்பிக் மூலம் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே. அது மட்டுமின்றி, உங்கள் கம்ப்யூட்டர் பூட் ஆக அதிக நேரம் ஆகின்றதா? ஸ்டார்ட் அப் அப்ளிகேஷன்கள் இயங்கத் தொடங்குவதைக் காண நீங்கள் வெகுநேரம் மானிட்டர் திரையை உற்று நோக்கிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளதா? காத்திருத்தல் என்பது மனத்தளவில் ஒரு சித்திரவதை என்று ஆல்டஸ் ஹக்ஸ்லி என்ற அறிஞர் கூறியது அப்போது தான் எவ்வளவு உண்மை என்று புரிகிறதா? இதற்கெல்லாம் ஓர் அருமருந்தாக நமக்குக் கிடைத்திருப்பதுதான் எம்.எஸ். கான்பிக் (MSConfig) என்னும் செயல்பாடு. இந்த பயன்பாட்டில் அடங்கியுள்ள செயல்பாடுகளை இங்கு பார்க்கலாம்.MSConfig என்பது Microsoft System Configuration Utility ன்பதன் சுருக்கமாகும். இதுவே விண்டோஸ் விஸ்டாவில் System Configurationஎன்று அழைக்கப் படுகிறது. இது ஒரு டூல்; சிஸ்டத்தைச் சரிப்படுத்த விண்டோ நமக்கு தரும் சாதனம். விண்டோஸ் 98, எக்ஸ்பி, விஸ்டா ஆகிய சிஸ்டங்களில் இது இணைந்தே கிடைக்கிறது. விண்டோஸ் 2000 சிஸ்டம் வைத்திருப்பவர்கள், இந்த டூலை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இப்போது இந்த சிஸ்டத்தினை சிலர் இன்னும் பயன்படுத்தி வருவதால் இதனைக் குறிப்பிட்டுள்ளேன்.




எம்.எஸ். கான்பிக் விண்டோவினைத் திறக்க, ஸ்டார்ட் அழுத்தி ரன் பாக்ஸில் msconfig என டைப் செய்து என்டர் அழுத்த வேண்டும். உடனே ஐந்து டேப்கள் அடங்கிய விண்டோ ஒன்று கிடைக்கும்.



ஜெனரல் டேப் General): இது முதலில் காணப்படும் டேப். இதில் மூன்று Normal Startup, Diagnostic Startup மற்றும் Selective Startup – பிரிவுகள் உண்டு. நாம் எதிர்பார்த்தபடி சிஸ்டம் இயங்குகையில் நார்மல் ஸ்டார்ட் அப்பினைப் பயன்படுத்துகிறோம். டயக்னாஸ்டிக் ஸ்டார்ட் அப் பிரிவினை நாம் எதிர்பாராத வகையில் சிஸ்டம் இயங்குகையில், அதனை ஆய்வு செய்திடப் பயன்படுத்துகிறோம். நாம் தேர்ந்தெடுத்த சில புரோகிராம்களின் இயக்கத்துடன், சிஸ்டம் இயக்கத்தினைத் தொடங்கிட செலக்டிவ் ஸ்டார்ட் அப்பிரிவைப் பயன்படுத்துகிறோம்.



பூட் (Boot):இந்த டேப்பில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில், நாம் கம்ப்யூட்டரில் அப்போது இன்ஸ்டால் செய்து வைத்திருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைக் காட்டுகிறது. அத்துடன் அந்த சிஸ்டங்களை, நாம் விரும்பும் வகையில் இணைந்து செயல்பட வைத்திட வழி தருகிறது. Safe Boot, Boot Log, Time out Delay ஆகியவற்றை இங்கு மாற்றி அமைக்கலாம். கம்ப்யூட்டர் இயக்கம் குறித்து அவ்வளவாகத் தெரியாதவர்கள், இந்த பிரிவினைக் கவனமாகக் கையாள வேண்டும். எதனையும் தேவையின்றி மாற்றுவதனைத் தவிர்க்க வேண்டும்.



சர்வீசஸ் (Services) : நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் இங்கு பட்டியலிடப்படும். மேலும் அப்போது அவை இயங்குகிறதா, நிறுத்தப்பட்டுள்ளதா (Running, Stopped) என்றும் காட்டப்படும். எந்த சர்வீஸ் பிரிவினையும் தேர்ந்தெடுத்து, அந்த இயக்கத்தினை தொடங்கவும், முடக்கவும் (Enable or Disable) செய்திடலாம். "Hide all Microsoft services" என்பதன் முன் டிக் அடையாளம் அமைத்துவிட்டால், மற்றவர்கள் இவற்றில் தேவையில்லாமல் மாற்றங்கள் செய்வதனைத் தடுத்துவிடலாம். மேலும் தேவையற்ற சர்வீஸ் புரோகிராம்கள், கம்ப்யூட்டர் இயக்கத்தின் பின்னணியில் இயங்கி நம் மெமரியில் இடம் பிடிப்பதனை, இந்த பட்டியலில் அதன் இயக்கத்தினை முடக்கி வைத்து தவிர்க்கலாம்.



ஸ்டார்ட் அப் (Startup) : இந்த டேப்பில் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில், கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும் போது, இயங்கத் தொடங்கும் பட்டியல் கிடைக்கும். சிஸ்டம் ட்ரேயில் இருக்கும் புரோகிராம்களும், சிஸ்டம் பின்னணியில் இயங்கும் புரோகிராம்களும் இந்த பட்டியலில் இருக்கும். பொதுவாகப் பலரின் கம்ப்யூட்டர்களில் போன்ற புரோகிராம்களை ஸ்டார்ட் அப் புரோகிராம்களாகப் பார்க்கலாம். இவற்றில் தேவை இல்லாததை நீக்கினால், கம்ப்யூட்டர் பூட் ஆவது விரைவில் நடக்கும்.



டூல்ஸ் (Tools) இயக்கத்தினுள்ளாக பல்வேறு டூல்ஸ்களை (எ.கா. System Information, Programs, System Restore போன்றவை) இயக்கு வதற்கான தளம் இது. சரி, அடுத்து எப்படி எம்.எஸ். கான்பிக் இயக்கி, சிஸ்டம் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்கலாம் என்று பார்க்கலாம். இதனை ஓரளவிற்கு சிஸ்டம் இயங்கும் தன்மையினை அறிந்தவர்கள் மட்டுமே செய்திட வேண்டும். (நமக்கா தெரியாது! என்று முடிவு செய்து பின் சிக்கலில் சிக்கி, கம்ப்யூட்டர் மலர் மீது பழி போட வேண்டாம்.)



முதலில் ஸ்டார்ட் அப் தொடங்கும்போதே தேவையான சர்வீசஸ் எவை எவை என தெரிந்து கொள்ளவும். அதே போல ஸ்டார்ட் அப் அப்ளிகேஷன்கள் என்ன என்ன வேண்டும் என்பதனையும் முடிவு செய்திடவும். இதனை ஓரளவு எண்ணிக்கை குறைவாகவே வைத்துக் கொள்ளவும். அடிப்படையில் மிகவும் முக்கியத் தேவைகளையும், கட்டாயம் பயன்பாட்டிற்குத் தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொள்ளவும். அடுத்து ரன் மெனு சென்று எம்.எஸ்.கான்பிக் டைப் செய்து பெறவும். சர்வீசஸ் டேப் கிளிக் செய்து தேவையற்ற சர்வீஸ் புரோகிராம்களை முடக்கி (Disable) வைக்கவும். "Hide all Microsoft Services" என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டுள்ள தனை உறுதி செய்திடவும். அடுத்து ஸ்டார்ட் அப் டேப் கிளிக் செய்து தேவையற்ற அப்ளிகேஷன் புரோகிராம்களை நீக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும். சிஸ்டத்தை ரீஸ்டார்ட் செய்திட வேண்டும் என்ற செய்தி கிடைத்தவுடன், அனைத்து அப்ளிகேஷன்களையும் மூடி, விண்டோஸ் இயக்கத்தினை ரீஸ்டார்ட் செய்திடவும். இப்போது ஸ்டார்ட் அப் நேரம் கணிசமாகக் குறைந்திடும். எந்த அளவிற்கு புரோகிராம்களை நீக்கி, குறைந்த எண்ணிக்கையில் புரோகிராம்களை, ஸ்டார்ட் அப் தொடங்கும்போது ஆரம்பிக்கும் வகையில் வைத்துள்ளீர்களோ, அந்த அளவிற்கு நேரம் குறையும். மீண்டும் ஏதேனும் புரோகிராம், ஸ்டார்ட் அப் செய்திடும்போதே தேவை என்றால், எம்.எஸ். கான்பிக் சென்று, ஸ்டார்ட் அப் போல்டரில் அந்த புரோகிராம்களின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

புதன், 13 ஜனவரி, 2010

தமிழ் புத்தாண்டு ,, பொங்கல்


தமிழ் புத்தாண்டு ,, பொங்கல் உழவன் வாழ் வழம் பெற தமிழ் நிலம்
நெற்க்கதிர்கள் தலையாட்டி தாள. கொய்தி எடுத்து, நெல்கதிர்கள் கழ மேட்டில் பறப்ப பட்டு பினைக்க பட்ட மாடுகள் மிதித்து சிதரித் தெறித்த நெல்மணிகளை கூட்டி கொனியில் இட்டு வீடு தொட்ட பின்
உரலில் இட்டு குத்தி அரிசியாக்கி தீ மூட்டி பானை அடுப்பில் ஏத்தி

பதங்கள் பல செற்த்து பொங்கி வழியே பொங்கலோ பொங்கல் என்று குலவையிட்டு பகிர்ந்துண்ணும் பொங்கல் வாழ்த்துக்கள்,

ஆப்பரா (Opera) கம்ப்யூட்டர்

சென்ற ஆண்டில் இலவசமாகக் கிடைத்த, எளிய ஆனால் பயன் அதிகம் தந்த சில புரோகிராம்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இன்னும் இவை பற்றி அறியாதவர்கள், இவற்றை இறக்கி இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
1.வி.எல்.சி (VLC): மீடியா பிளேயர்களுக்கான புரோகிராம். மீடியாவில் எந்த பார்மட்டில் ஒரு பைலைக் கொடுத்தாலும் அதனை இயக்கும். வீடியோ பைல்களை, ஐபாட் சாதனத்திற்கேற்ற வகையில் மாற்றித்தரும். சிடி, டிவிடிக்களைப் பிரித்து சிறிய பைல்களாக மாற்றித்தரும். கிடைக்கும் தளம் : http://www.videolan.org/vlc/
2. பாக்ஸ் இட் ரீடர் (FoxIt Reader): அடோப் ரீடர் தொகுப்பின் இடத்தில் வைத்துப் பயன்படுத்தக் கூடிய சிறிய பி.டி.எப். ரீடர் புரோகிராம். விண்டோஸ், விண்டோஸ் மொபைல், லினக்ஸ் மற்றும் பிற சிஸ்டங்களுக்கும் கிடைக்கிறது. கிடைக்கும் தளம்: http://www.foxitsoftware.com/pdf/reade

3. பிட்ஜின் அண்ட் அடியம் (Pidgin and Adium): இந்த இரண்டும் இன்ஸ்டன்ட் மெசேஜ் கிளையண்ட் புரோகிராம்ஸ். பிட்ஜின் விண்டோஸ் சிஸ்டத்திலும், ஏடியம் மேக் சிஸ்டத்திலும் இயங்கும். சிறிய எளிதான புரோகிராம். கிடைக்கும் தளம்: http://adium.im

4. இர்பான் வியூ (IrfanView) : மிக விரைவாக போட்டோக்களைப் பார்ப்பதற்கும், எடிட் செய்வதற்கும் உரிய சிறிய புரோகிராம். இதில் அதிகமான எண்ணிக்கையில் கீ போர்ட் ஷார்ட் கட்களைப் பயன்படுத்தலாம். கிடைக்கும் தளம்: http://www.irfanview.com

5. பயர்பாக்ஸ்: சென்ற ஆண்டில் மிக அதிகமாக டவுண்லோட் செய்யப்பட்ட பிரவுசர் புரோகிராம். இது பற்றி ஒவ்வொரு இதழிலும் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது. கிடைக்கும் தளம்: http://www.mozilla.com/enUS/firefox/personal.html

6. செவன் ஸிப் (7Zip): பைல்களைச் சுருக்க, விரிக்க உதவிடும் புரோகிராம். அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம். பல்வேறு ஸிப் பைல் பார்மட்களைக் கையாள்கிறது. கிடைக்கும் தளம்: http://www.7zip.org/

7. ஆப்பரா (Opera) : பலரால் அதிகம் கவனிக்கப்படாத, ஆனால் மிகச் சிறந்த பிரவுசர். கூடுதல் பாதுகாப்பு, அதிக எண்ணிக்கையில் ஷார்ட் கட் கீகள் ஆகியவை கொண்ட எளிய சிறிய புரோகிராம். http://www.opera. com/browser/

8. ஸ்கைப் (Skype): இன்டர்நெட் வழி பேசி தொடர்பு கொள்வதனை மக்களிடையே பிரபலமாக்கிய புரோகிராம். இன்றும் வீடியோ கான்பரன்சிங் மற்றும் இருநபர் பேச்சு வழி தொடர்புக்கு சிறந்த புரோகிராமாகக் கருதப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நாடு கடந்து வாழும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசிட, வெப்காம் வழி பார்த்துப் பேசிட இது சிறப்பாக உதவுகிறது. விண்டோஸ், மேக், லினக்ஸ் மற்றும் பல மொபைல் சிஸ்ஸங்களுக்கு எனத் தனித்தனி பதிப்புகள் கிடைக்கின்றன. கிடைக்கும் தளம்: http://www.skype. com/

9. க்யூட் பி.டி.எப். ரைட்டர் (CutePDF Writer): டாகுமென்ட்களை பி.டி.எப். பைலாக மாற்ற அதிகமான எண்ணிக்கையில் டவுன்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் புரோகிராம். கிடைக்கும் தளம்: http://www.cutepdf.com/

10. கீப் பாஸ் (KeePass): எத்தனை பாஸ்வேர்ட் களைத்தான் நினைவில் வைத்திருப்பது? கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி இது. அவர்களுக்காகவே இந்த ஓப்பன் சோர்ஸ் புரோகிராம் உதவுகிறது. இதற்கான மாஸ்டர் பாஸ்வேர்டை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும். பிற பாஸ்வேர்ட்களை இந்த புரோகிராம் நினைவில் வைத்து உங்களுக்கு உதவும். கிடைக்கும் தளம்: http://keeppass.info/
-------------------------- 9/1/2010
விண்டோஸ் – என்னதான் வேகமாக இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருந்தாலும், சில வேலைகளை மேற்கொள்கையில் தொடர்ந்து எந்த மாற்றமும் இன்றி அதே பாணியில் தான் இயங்கும். எடுத்துக் காட்டாக வெல்கம் ஸ்கிரீன், ஸ்டார்ட் அப் புரோகிராம்களைக் கொண்டு வருதல், சிஸ்டம் ஷட் டவுண் செய்தல் ஆகியவற்றைக் கூறலாம். இந்த வேலைகளில் சிஸ்டம் பைல்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வேகம் தரும் சில புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் இலவசம் தான். இந்த புரோகிராம்கள் குறித்த தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.
1. ஸ்டார்ட் அப் டிலேயர் (Startup Delayer): அடிக்கடி புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், பல வேளைகளில் என்ன செய்கிறோம் என்று அறியாமல், அவற்றை ஸ்டார்ட் அப் லிஸ்ட்டில் வைத்து விடுகிறோம். இதனால் ஸ்டார்ட் அப் புரோகிராம் எண்ணிக்கை அதிகமாகிறது. விண்டோஸ் இயக்கம் நிலைக்கு வர நேரமாகிறது. ஸ்டார்ட் அப் டிலேயர் என்னும் இந்த புரோகிராம், ஸ்டார்ட் அப் லிஸ்ட்டில் உள்ள புரோகிராம்களை, ""நீங்கள் எல்லாம் கொஞ்சம் பொறுமையா இருங்க, அப்புறமா வாங்க'' என்று சொல்லி விண்டோஸ் இயக்கத்தினை அமல்படுத்து கிறது. இதனால் உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கி மேலும் பணிகளை எடுத்துக் கொள்ள தயாராகிறது. இந்த நிலை வந்த பின்னர், ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் ஏற்றப்படும்.
ஸ்டார்ட் அப் டிலேயரை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன், உங்கள் சிஸ்டத்தில் உள்ள அனைத்து ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் அனைத்தையும் இது பட்டியலிட்டுக் காட்டுகிறது. இவற்றில் எதனை எல்லாம் தாமதமாகக் கொண்டு வரலாம் என்று கருதுகிறீர்களோ, அவற்றை இழுத்து வந்து கீழாக உள்ள வெள்ளை பாரில் விட்டுவிட வேண்டும். குறிப்பிட்ட அப்ளிகேஷனைக் காட்டும் கோடு ஒன்று அங்கு காணப்படும். தாமதம் அதிகமாக இருக்க வேண்டுமா அல்லது குறைவாக இருக்க வேண்டுமா என முடிவு செய்து, அதற்கேற்ப அந்த கோட்டை இழுத்துவிடலாம்.
இந்த இலவச புரோகிராமினை http://www.pcworld.com/article/151952/boot_ faster_with_startup_delayer.html என்ற முகவரி யில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இது விண்டோஸ் 7 தொகுப்பிலும் இயங்கும்.
2. குரோம் (Chrome) மாறலாமா?: உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் மிக அதிகம் பயன்படுத்தப் படும் புரோகிராம் எது? தயக்கமின்றி இன்டர்நெட் பிரவுசர் என்று சொல்லலாம். வேகமாக இன்டர்நெட் பிரவுசிங் செய்திட வேண்டு மென்றால், அடிப்படையில் வேகமான இன்டர்நெட் இணைப்பு வேண்டும். அதன் பின் வேகமாக இயங்கும் பிரவுசர் வேண்டும். வேகம் மட்டுமே உங்கள் இலக்காக இருக்கும் பட்சத்தில், நீங்கள் குரோம் பிரவுசரை இன்ஸ்டால் செய்து இயக்கலாம். வேகத்தைப் பொறுத்தவரை, குரோம், பயர்பாக்ஸ் 3.5, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8, ஆப்பரா 10, சபாரி என வரிசையில் இடம் பெறுகின்றன.
3. பவர் செட்டிங்ஸ் (Power Settings): பெர்சனல் கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, அதன் இயக்க தன்மையை மெதுவாக்கி, அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைத்து மின்சாரத்தை மிச்சப்படுத்தப் போவதில்லை. ஏனென்றால் அது பேட்டரியில் இயங்கவில்லை. எனவே கம்ப்யூட்டர் மேற்கொள்ளும் ஒவ்வொரு வேலையையும் அதிக பட்ச திறன் கொண்டு இயங்கும் வகையில் அமைப்பது நல்லது. இதற்கென விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா டிபால்ட்டாக ஒரு பேலன்ஸ்டு

(‘Balanced’)

பெர்பார்மன்ஸ் என்ற நிலையைக் கொண்டுள்ளன. இதனை இன்னும் கொஞ்சம் ஊக்குவிக்க ஒரு சிறிய வேலையைச் செய்யலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து கிடைக்கும் ரன் கட்டத்தில் பவர் (Power) என டைப் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Power Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Higher Performance என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது அங்கே உள்ள பட்டியலில் இல்லை என்றால் Show Additional Plans என்பதைக் கிளிக் செய்திடவும். இதிலும் ஒவ்வொரு பகுதியாக, எடுத்துக்காட்டாக, ஹார்ட் டிரைவ் ஷட் டவுண் செய்திடும் முன் எவ்வளவு நேரம் சுழலாமல், வேலை செய்யாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற செட்டிங்ஸ் அமைக்க வேண்டும் என்றால் Change plan settings, Change advanced power settings என்பனவற்றைக் கிளிக் செய்திடவும்.
4. புரோகிராம் நீக்கம்: பெர்சனல் கம்ப்யூட்டர்களை வாங்குகையில், அதனைத் தயாரிக்கும் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர் களுக்குப் பயனளிக்கும் என்று எண்ணுகின்ற பல புரோகிராம்களை பதிந்து அனுப்புகின்றனர். இவை ஹார்ட் டிரைவ் இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கும். சில ஸ்டார்ட் அப் லிஸ்ட்டில் இருந்து கொண்டு ராம் மெமரியைக் காலி செய்திடும். எனவே இவற்றை நீக்கலாம். இதற்கு கண்ட்ரோல் பேனல் சென்று ஆட்/ரிமூவ் பிரிவைப் பயன்படுத்தி நீக்கலாம். அல்லது ஏற்கனவே இந்த பகுதியில் எழுதப்பட்ட Revo Uninstaller போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். இது போன்ற புரோகிராம்கள், தேவையற்ற புரோகிராம்களை நீக்குவதுடன், ஏற்கனவே நீக்கப்பட்ட புரோகிராம்கள் தொடர்பான சிறிய பைல்களையும் அறவே காலி செய்திடும்.
5. வெப் ஆப் ட்ரஸ்ட் (Web of Trust):இந்த புரோகிராம் விண்டோஸ் தொகுப்பினை ட்யூன் செய்யாது என்றாலும், அதனைப் பாதுகாக்கும் வேலையைச் செய்கிறது. பலமுறை இன்டர்நெட் தளங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்து, வைரஸ் மற்றும் மால்வேர்களிடம் நம் கம்ப்யூட்டர்கள் மாட்டிக் கொள்கின்றன. எப்படி லிங்க் ஒன்று மோசமாக நம்மை மாட்டிவிடும் மால்வேர் புரோகிராம்களைக் கொண்டுள்ளது என்று தெரிந்து கொள்வது? அதற்கான வழிதான் வெப் ஆப் ட்ரஸ்ட் என்னும் புரோகிராம். இது இலவசமாகக் கிடைக்கிறது. இது ஒரு ஆட் ஆன் தொகுப்பாக இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கும் பயர்பாக்ஸுக்கும் கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால், இது ஒவ்வொரு லிங்க்கிற்கும் பச்சை (பாதுகாப்பானது), மஞ்சள் (ஆபத்து இருக்கலாம்) மற்றும் சிகப்பு (உறுதியாக ஆபத்தானது) என்றபடி வண்ண ஐகான்களை வழங்கும். அல்லது லிங்க்கின் மீது ரைட் கிளிக் செய்து, அங்கு கிடைக்கும் மெனுவில் View WOT scorecard என்பதைத் தேர்ந்தெடுத்து நாமாக சோதித்துக் கொள்ளலாம்.
ஒரு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எப்போது நமக்கு எளிதானதாகவும், உற்ற தோழனாகவும் தெரியும்? அது நாம் எதிர்பார்க்கும் வேலையை, குறித்த காலத்தில் செய்து கொடுக்கும் போது, இல்லையா! இதற்கு உங்கள் விண்டோஸ் தொகுப்பைச் சற்று ட்யூன் செய்திடலாம்.
1.குளோஸ் ஆல் விண்டோஸ் (Close All Windows): கம்ப்யூட்டரில் அன்றைக்கான வேலையை முடித்துவிட்டீர்கள். ஷட் டவுண் செய்திடும் முன் திரையில் அதிக எண்ணிக்கையில் புரோகிராம்கள் திறந்து இருப்பது தெரிகிறது. ஒவ்வொன்றாக மூட வேண்டும்; சற்று எரிச்சல் தான். இதற்காகவே குளோஸ் ஆல் விண்டோஸ் என்ற புரோகிராம் கிடைக்கிறது. இதனை பதிந்து டாஸ்க் பாரில் போட்டு வைத்திடுங்கள். பின் இதனைக் கிளிக் செய்தால், அனைத்து புரோகிராம்களும் ஒரு பிளாஷ் மாதிரி மூடப்படும். ஏதேனும் ஒரு புரோகிராமில் பைல் சேவ் செய்யப்பட வேண்டி இருந்தால், உங்களைக் கேட்டு டயலாக் பாக்ஸ் தரப்பட்டு வழக்கம்போல சேவ் அழுத்த வேண்டியதிருக்கும்.
2. டாஸ்க் பார் ஓரத்தில்: இப்போதெல்லாம் அகலமான எல்.சி.டி. திரை கொண்ட மானிட்டரை அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். இதில் இடது வலது ஓரங்களில் சிறிது இடம் விட்டு மற்ற இடங்களில் விண்டோக்கள் கிடைக்கின்றன. ஏன், இதனையும் பயன்படுத்தலாமே. முழுவதுமாக விண்டோ காணப்பட்டாலும், நமக்கு புரோகிராம்களில் மேல் கீழாகத்தானே இடம் தேவைப்படும். எனவே கீழே உள்ள டாஸ்க் பாரை, ஓரத்திற்குக் கொண்டு செல்லலாமே. முதலில் கீழேயே வைத்துப் பார்த்துப் பயன்படுத்திய கண்களுக்கு சற்று வித்தியாசமாகத்தான் தெரியும். பழகிவிட்டால் சரியாகிவிடும். நமக்கு புரோகிராம்களில் வேலை செய்திட அதிக இடம் கிடைக்கும்.
இதற்கு டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Lock the taskbar என்று இருப்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அடுத்து, டாஸ்க் பாரில் உள்ள காலி இடத்தில் இடது கிளிக் செய்து அப்படியே இழுத்து இடது அல்லது வலது பக்கம் கொண்டு விட்டுவிடவும். ஓரத்திற்கு சென்றவுடன் டாஸ்க் பார் இறுத்திக் கொண்டு விடும். பின் மவுஸை அழுத்தி இருப்பதை எடுத்துவிடவும்.
-----------------------no.2,9/1/2010
-------------------
அண்மையில் இணையத்தில் உலா வந்த போது பார்த்த ஒரு தளத்தின் மீது நான் தீராத ஆசை கொள்ளும் அளவிற்கு அது என்னைக் கவர்ந்தது. கம்ப்யூட்டர் மலருக்கான பல டிப்ஸ்களை மட்டுமின்றி, பல பயனுள்ள தகவல்களையும் அது தந்தது. மேலும் நம்மை உற்சாகப்படுத்த கேம்ஸ்கள் பலவற்றையும் அது கொண்டுள்ளது. இந்த தளத்தின் முகவரி: http://www.safesurfer.org/ இந்த தளம் பல பிரிவுகளைக் கொண்டு அழகாக நம்மைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சென்றவுடன் தளம் அமையும் விதம் பாராட்டத்தக்கதாய் அமைகிறது. இதன் பிரிவுகளைப் பார்க்கலாம்.
Forum: இதில் இந்த தளத்தைக் காண வருபவர்கள் கூறும் கருத்துக்களைப் படிக்கலாம். நீங்களும் உங்கள் கருத்தை எழுத வேண்டும் என எண்ணினால், இதில் பதிந்து கொள்ள வேண்டும். அதற்கு எந்த நிபந்தனையும் இல்லை என்பதால், இந்த தளம் வரும் அனைவரும் இதில் தங்களைப் பதிந்து கொள்வார்கள்.
2� Blog: நாம் சில கருத்துக்களை பைசாவுக்கு புண்ணியம் இல்லாதது என்று வேடிக்கையாகவும் (சில வேளைகளில் சீரியசாகவும்) கூறுவோம் அல்லவா! அது போல்தான் இதுவும். இங்கு நீங்களும் உங்களைப் பதிந்து கொண்டு எழுதலாம். டிப்ஸ், ட்ரிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர், இன்டர்நெட் குறித்த தலைப்புகளில் தகவல்கள் ஆகியவற்றைத் தரலாம்.
The Buzz : இந்தப் பிரிவில் நாம் ஆர்வம் கொண்டுள்ள பல தலைப்புகளில் அண்மைக் காலத்திய செய்திகளையும் தகவல்களையும் படிக்கலாம். ஸ்போர்ட்ஸ், சயின்ஸ், உடல்நலம், தொழில் நுட்பம் எனப் பல பிரிவுகளில் தகவல்கள் கிடைக்கின்றன.
Lingo: இன்டர்நெட் குறித்த ஸ்லாங் என்னும் வழக்குச் சொற்கள் மற்றும் சுருக்குச் சொற்களைக் காணலாம். மேலே உள்ள ஆங்கில எழுத்துக்கள் வரிசையில் உள்ள எழுத்து ஒன்றில் அழுத்தினால், அந்த எழுத்தில் தொடங்கும் சொற்கள் குறித்த விளக்கங்கள் கிடைக்கும்; அல்லது ஸ்குரோல் செய்து கீழாக இதன்பக்கங்களைக் காணலாம்.
Tips’n’Trix: நான் அதிகம் விரும்பும் பிரிவு. கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் குறித்த பல டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ் இந்தப் பிரிவில் தரப்படுகிறது. அது மட்டுமின்றி நீங்கள் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய தளங்கள் என்று ஒரு பட்டியல் காட்டப்படுகிறது.
மேற்கண்ட பிரிவுகளுடன் இன்னும் சில பயனுள்ள பிரிவுகள் உள்ளன. அவற்றை நீங்களே இந்த தளம் சென்று அறிந்து கொள்ளலாம்.

வெள்ளி, 8 ஜனவரி, 2010

பாக்டீரியா நீக்கம் செய்யமுடியும்


பழங்கள் காய்கறிகள் போன்றவற்றைபைகளிலும், டப்பாக்களிலும் அடைத்து சீல் செய்து கடைகளில் விற்கிறார்கள். இந்த பொட்டலங்களுக்குள் தீமை செய்யும் Salmonellosis, ஈகோலி பாக்டீரியாக்கள் இருப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழிப்பதற்காக பொட்டலங்களை சீல் செய்வதற்கு முன்னால் உள்ளே இருக்கும் வாயுவை உறிஞ்சி எடுத்துவிட்டு ஓசோன் வாயுவை அடைக்கும் நடைமுறை இப்போது வழக்கத்தில் இருக்கிறது. ஓசோன் வாயுவிற்கு பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் உண்டு.

பர்டியூ பல்கலைக்கழக ஆய்வாளர் கெவின் கீனர் என்பவர் ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளார். நம்முடைய சுற்றுப்புறத்தில் நிரம்பி இருக்கும் ஆக்சிஜன் வாயுவை எளிய முறையில் அயனியாக்கம் செய்து ஓசோன் வாயுவாக மாற்றும் முறைதான் அது. பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பொட்டலங்களில் அடைத்து சீல் செய்தபிறகும்கூட உள்ளே இருக்கும் தீமைசெய்யும் பாக்டீரியாக்களை அழிக்கும் தொழில் நுட்பம் இது. உணவின் மூலம் கடத்தப்படும் நோய்க்கிருமிகள் ஆரம்ப நிலையிலேயே அழிக்கப்பட்டுவிடுவதால் ஒரு பயனுள்ள தொழில்நுட்பமாக இது கருதப்படுகிறது.

இரண்டு உயர் மின் அழுத்த, குறைந்த வாட் கம்பிச்சுருள்களை சீல் செய்யப்பட்ட பொட்டலங்களுக்கு வெளியே வைக்கும்போது ஒரு காந்தப்புலம் உருவாகிறது. இந்த காந்தப்புலம் பொட்டலங்களுக்குள் இருக்கும் ஆக்சிஜன் வாயுவை அயனியாக்கம் செய்து ஓசோன் வாயுவாக மாற்றிவிடுகிறது. 30 வினாடிகளில் இருந்து 5 நிமிடநேரத்தில் பாக்டீரியாக்களை அழிக்கும் பணி முடிவடைந்துவிடும். இறுதியில் அயனியாக்கம் செய்யப்பட்ட ஆக்சிஜன் வாயுவும் அதனுடைய பழைய நிலைக்கு திரும்பிவிடும். 30 வாட் முதல் 40 வாட் வரையிலான மின் ஆற்றலில் இந்தக் கருவி செயல்படுவதால் சிக்கனமானது. பொட்டலத்தின் வெளிப்புறம் மிகச்சிறிய அளவிற்கே வெப்பமடைவதால், உள்ளே இருக்கும் உணவுப்பொருளின் சுவை மாறிப் போய்விடுவதில்லை.

கீனரின் கண்டுபிடிப்பில் ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட பொட்டலங்களை பிரிக்காமலேயே பாக்டீரியா நீக்கம் செய்யமுடியும் என்பதுதான் சிறப்பு. "ஒரு பாட்டரியை மின்னேற்றம் செய்வதுபோன்ற எளிய முறை இது" என்கிறார் கீனர். ஆக்சிஜனை அயனியாக்கம் செய்வதற்காக எந்த மின்வாய்களும் பயன்படுத்தப்படுவதில்லை. கண்ணாடி, பிளாஸ்டிக் போன்ற நெகிழ்வுப்பைகளுக்குள் அடைக்கப்பட்டவற்றைக்கூட இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாக்டீரியா நீக்கம் செய்ய இயலும். இன்னும் சொல்லப்போனால் சீல் செய்யப்பட்ட மருந்துகளில் இருந்துகூட பாக்டீரியா நீக்கம் செய்ய இந்த கண்டுபிடிப்பு உதவுகிறது.

அதெல்லாம் இருக்கட்டும். நம்முர் சாமானியனுக்கு இந்த கண்டுபிடிப்பு உதவுமா?

ஒரு கட்டுச்சோற்று பொட்டலத்தையோ, தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட பிரியாணி பொட்டலத்தையோ நீண்ட நாட்கள் பாதுகாக்க இந்த கண்டுபிடிப்பு உதவும் என்றுதான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.

[thodu varmam] வர்மம்.

[thodu varmam] வர்மம்.
____________________
மனித உடம்பில் பல மர்ம முடுச்சுகள் அந்த மரும பகதீகளை விரல்கொண்டு தொட்டல் போதும்
அவயங்கள் செயல்லருந்து போகும். எப்படி தட்டுவது எங்கு தட்டுவது.
மனித உடலில் உள்ள ரத்தக் குழாய் பாரவும் நரம்புகளின் முடிச்சுகளில் தான்
வர்ம நிலைகள் உள்ளன இவைகளை தற்காலிக மாக அல்லது நிரந்தமாக செயல் இழக்கச்
செய்வது தான் வர்மமாகும்.
எதிரியின் உடலைத் தட்டுவதால்.எதிர்ரி எதுவும் செய்யே இயலாமல் மயக்க நிலைக்கு
தல்லலாம்.போது வாக நரம்புகள் எங்கேல்லாம் செர்ந்து இருக்கின்றதொ(சந்திப்பு)
இனையும்மிடங்கள் ஒரு சிரிய முடிச்சு பின்னல்- அது தான் வர்ம நிலைகளாகும்.
வர்மம் என்பது மர்மம் என்னும் சொல்லாம்.மர்மம் என்றால் ரகசியம் இது தான் என்று
அறிய முடியாதது தான் வர்மம்,
மனித உடல் பொற்வைக்குல்.எலும்புகள் மொத்தம் 210கும்
நரம்புகள். உடம்பின் எல்லா பாகளும் உரிய நெரத்தில் சரியான முறையில் வேலை செய்ய
வைப்பது நரம்பு மண்டலமாகும்.
மூளையும் தண்டு வடமும் நரம்பு மண்டலத்தின் இரண்டு முக்கியமான பிரிவுகளாகும்.
மூளையின் வலதுபக்கம்,இடதுபக்கம் ஆகிய இரு பகுதிகளில் இருந்து நரம்புகள்
புறப்படுகின்றன.தலையில் அடிப்பகுதியில் உள்ள துவாரத்தின் மூலமாக முதுகெலும்பிற்குள்
நுழைகின்றன.இடது வலதுபக்கமாக,வலது இடதுபக்கமாக.
12 டு ஜொடி நரம்புகள் மூளையிலிருந்து பிரிந்து நெற்றிப் பகுதிக்கு வருகின்றன
என்றும்,31து ஜொடி நரம்புகள் தண்டு வடத்திலிருது புறப்பட்டு உடம்பு முழுவதும்
பறவிக் கிடக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

இணையகக் கிடக்கும் நரம்புகள் எத்தானை எத்தனையோ? கிளைகளாய் பிரிந்து பரவி
இருக்கின்றது.போகப்போக நரம்பின் அளவு சிறிது சிறிதாக மாறுகின்றன.கடைசியில்
கண்ணூக்குத் தெரியாத மெல்லியதாக இருக்கும்.

உடம்பு முழுவதும் வலைப் பின்னல்போல பரவிக்கிடப்பதால் உடம்பின்
எந்தப் பகுதியில் சங்கடம் உண்டானாலும் அது நரம்பைத் தாக்குகின்றன.

நரம்புகள் எலும்புப்பின் இடுக்குகள் வழியாகத்தான் உடலில் பரவுகின்றன.நரம்புகள் தான்
தசைகளை இயக்குகின்றன. நரம்புகள் தான் செய்திகளைப் பரப்புகின்றன
கட்டளைகளைத் தெரிவிக்கின்றன.உயிரின் முக்கிய பகுதியான மூளையின்
தூதுவனாகச் செயல்படுவது நரம்பு தான்.

தசநாடிகள். இடகலை,பிங்கலை,சுழிமுனை,காந்தாரி,அத்தி,சிங்குவை,அலம்புடை,குருவை,
சங்கினி என பத்தும் தசநாடி எனப்படும்.
1.இடைகலை, வலது கால் பெருவிரலில் இருந்து (கத்திரிக் கோல் முனையைபோல)
இடடு நாசியைப் பற்றி நிற்கும் நாடி.
2.பிங்கலை, இடது கால் பெருவிரலில் இருந்து( ,,,,,,,,,,,, )வலது நாசி வரை உள்ள நாடி.
3.சுழிமுனை; முலாதாரத்தில் இருந்து எல்லா நாடிகளுக்கும் ஆதாரமாக நடுநாடியாக
தலை வரை இருக்கும் நாடி.
4.சிங்காலை; உள்நாக்கில் நின்று உண்ணும் உணவை விழுங்கச் செய்வது.
5.புருடன்; மூலாதாரத்தில் இருந்து வலது கண் வரை இருப்பது.
6.காந்தாரி; மூலாதாரத்தில் இருந்து இடது கண் வரை இருப்ப்து.
7.அத்தி; மூலாதாரத்தில் இருந்து வலது காது வரை இருப்பது.
8.அலம்புடை; மூலாதாரத்தில் இருந்து இடது காது வரை இருப்பது.
9.சங்கினி; மூலாதாரத்தில் இருந்து பிறப்புறுப்பு வரை இருபது.
10.குருவை; மூலாதாரத்தில் இருந்து வாய்வரை இருப்பது.
--------------------------------------------------------------------------------------------
இந்த 10 நாடிகளில் இடைகலை,பிங்கலை,சுழிமுனை என்னும் மூன்று நாடிகளே முக்கியம்
மானது.எனவே அவைகளை திரிநாடி எனச் சொல்வர்.பிரம நாடி,விஸ் நாடி,ருத்திர நாடி
என்றும் சொல்லபடுவதுண்டு.

இடகலை,பிங்கலை,சுழிமுனை என்ற மூன்றும் முறையே வாத,பித்த,சிலேத்தும நாடிகளின்
அடக்கம் எனவும் மூடிவில் இம்மூன்றும் வாதத்தில் இனையும் என்றும் சொல்லப்படும்.

காந்தாரி,அத்தி,சிங்குவை,அலம்புடை முதலிய நாங்கும் பித்தத்திலும்,குருவை,சங்குனி,
புருடன் ஆகிய மூன்றும் சிலேத்துமத்திலும் இணையும் என்பர்.

காற்றே கடவுள்
--------------------
காசேதான் கடவுள் என்பது இன்றைய உலக வழக்கு.சித்தர்கள் காற்றைத்தான்
கடவுளுக்கு சமமானதாகச் சொன்னார்கள்.
பித்தம் என்னும் நெருப்பும்,கபம் என்னும் நீர்த் தன்மையும் அதிகமாவதும்,
குறைவதும்,பரவுவதும், வாதம் என்னும் காற்றின் பணிகளாகும்.
வாதம், வாயு,காற்றும்,வளி கால என்றெல்லாம் அழைக்கப்படும் முதன்மைக் குணமான வாயு
பத்து கிளைகளாக செயல்படும்.
பிராணன்,அபானன்,வியானன்,சமானன்,நாகன்,கூர்மன்,கிரிகரன்,தேவதத்தன்,தனஞ்சயன்.
சாதாரணமாக ஒரு நிமிடத்திற்க்கு 15மூச்சு வீதம் ஒரு மனிதன் 24 மணி நேரமாகிய
ஒரு நாளில் 20,600 மூச்சுகள் சுவாசிக்கிறான்.ஒரு சுவாசத்திர்க்கு நாங்கு அங்குலம் வீதம் அழிவு
உண்டாகின்றது.மீதமுள்ளவை தான் பிராணன் என்னும் வாயு உடலில் செயல்படுகிறது

(வர்மம் 2)ப, அபான வாயு எனப்படும் மலக்காற்று மலவாயிலும் கருவாயிலும் இருந்து
பல நீர்களை வெளியே தள்ளுகின்றது.வியானவாயு தொலில் இருந்துகொண்டு 7200
நரம்புகளில் பரவி நீட்டுவது,மடக்குவது,தொடுவது முதலிய பணிகளுக்கு உதவுகின்றது.
உதான வாயு உணவுச் சாரத்தை செரிக்கச் செய்து நாடிகளில் பரப்புகின்றது.
சமான வாயு தெங்கி இருக்கும் வாயுக்களைச் சமமாக பரப்புகின்றது.
நாகன் என்னும் வாயு கண் விழித்து பார்க்கவும்,அறிவில் உணர்வும் செய்கின்றது
கூர்மன் என்னும் வாயு வாஉ மூடல்,சிரித்தல்,கொட்டாவி விடுதல் முதலிய பணிகளைச்
செய்கின்றது.கிரிகரன் என்னும் வாயு மூக்கு, நாக்கு முதலிய இடங்களில் உணர்வை
எழுப்புவதுடன் தும்மல்,இருமல் முதலியன உண்டாக்குகிறது.
தேவதத்தன் என்னும் வாயு மலவாய்,கருவாய்ப் பகுதிகளில் பரவிவந்து கோபம்
சோம்பல்,மோகம் என்ற உணர்வுகளைச் செய்கின்றது.தனஞ்செயன் என்னும் வாயு
உடல் முழுவதும் பரவி இருப்பது.மரணம் மடைந்த பின்னர்(குரிப்பிட்டநெரம் வரைஇருந்து)
வெளியேறும் காற்று.*
இந்த வாயு என்னும் காற்று பரவிக்கொண்டு நடமாடிக்கொண்டு இருந்தால்தான் உடல் இயங்கும்
அப்படி நடக்காமல் ஒரே இடத்தில் அல்லது ஆங்காங்கே தடைகள் உண்டாக்குவதே உடல்
செயல் படாததற்குக் காரணம்.வர்மத் தாக்குதல் உண்டாக்குவதன் தத்துவமே இதுதான்.
குறிப்பிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால் இளக்குவதே-தடைப்பட்ட
காற்றை வெளியாக்குவதே வர்ம மருத்துவ முறையாகும்.
தேவை இல்லை என்பதை விட்டுவிட்டு!
அவசியம் தேவை1 நாடிப் பார்த்தல்
வர்ம மருத்துவத்துக்கு தெரிய வேண்டியவைகளில் முக்கியமானது
நாடி பார்த்தல்.காற்று எனப்படும் வாயுவின் ஓட்டம்தான் உடல்
இயக்கத்திற்கு மிக முக்கியமானதாகும்.இந்த நடமாட்டத்தை அறியும்
கலைதான் நாடி பார்பது.
பிறப்புறுப்பு,குதிங்கால், தொப்புள்,கை,மார்பு,கழுத்து,புருவம்,உச்சி,காது,மூக்கு முதலிய இடங்களில் நாடித்
துடிப்பைக்காணமுடியும் என்றாலும் தெளிவாகப் பார்க்கவும்,எந்த
நெரத்திலும்,எல்லா இடங்களிலும் நாடி பார்க்க சிறந்த இடம் கைகள்
தான்.ஆண்களுக்கு வலது கையிலும் பெண்களுக்கு இடது கையிலும்
நாடி பார்க்கவேண்டும்.நோயாளியின் முன் கையை சற்று நீட்டி மடக்கி
விரல்களை உருவி விட்டு பிறகு சற்று அளவுடன் உயரத் தூக்கிப்
பிடித்துப் பார்க்கவேண்டும்.
நொயாளியின் முன் கையை நீட்டி மணிக்கட்டிற்கு ஒரு அங்குலம்
தள்ளி பெருவிரல் பக்கமாக தனது மூன்று விரகளையும் இலேசாக
அழுத்தியும் தளர்ச்சியாகவும் பார்க்கவேண்டும்.
சுட்டு விரல்,நடுவிரல்,மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால்
மட்டும் நாடி பார்க்க வேண்டும்.சுட்டு விரலால் தெரிவது வாதம்.
நடுவிரலில் தெரிவது பித்தம்.மொதிர விரலில் தெரிவது சிலெத்துமம்.
------------------------------------------------------------------------------------------
நாடிகள் சிறண நிலையில் இல்லாது இருப்பவர்கள்
விஷம் சாப்பிட்டவர்,போதை மருந்து சாப்பிட்டவர்,அதிக ரத்தம்
போக்கு உள்ளவர்,ரத்த குரைவுயுடையவர்,
நடை; வாத நாடி-அன்னம்,கோழி,ஓணான்,மயில்,புறா முதலியவைகளில் ஏதாவது ஒன்று
நடப்பது போல் தெரியும்.
பித்த நாடி-அட்டை,ஆமை நடையைப் போல்லிருக்கும்.
சிலேத்தும நாடி-பாம்பு நடையைப் போலத் தெரியும்.
வாத நாடி அளவுக்குமேல் அடித்தால் வாயில் புளிப்புச் சுவை
உண்டாகும்.பித்த நாடி அளவிற்குமேல் இருந்தால் வாயில் கசப்பு சுவை
உண்டாகும்.சிலெத்தும நாடி அளவிற்குமேல் இருந்தால் தித்திப்பு
சுவை உண்டாகும்.
வர்ம இளக்கு முறைகளில் வீட்டில் உள்ள பொருட்களே மிகுதியாகக்
கையாளப்படுகின்றன.சுக்கு குளுமையை நீக்கி வெப்பத்தைக் கொப்பது
வாயு ஓட்டத்தை சீராக்குவது.ஆகையால் சுக்கு கியாழமாகவோ,
ஊதலாகவோ,பொடியாகவோ பயன்படுத்தப்படுகிறது.
உணவு கஞ்சிச் சொறு
சொற்றுடன் கூடிய கஞ்சி இதை உள்ளே சாப்பிட்டால் உடல் பெருகும்.
உடம்பு அழகு உண்டாகும்.வெப்பம் மாறும்.அதிகம் உண்பதால் சளி
உண்டாகும்.
கொதி கஞ்சி;--- சொறு வேகும்போது வடித்து எடுத்து கொதி கஞ்சி.
இதைக் குடிப்பதால் வீரிய வளர்ச்சி உண்டாகும்.
உறை கஞ்சி:--- கஞ்சி நீரை வடித்தவுடன் சூடாக இருக்கும் போது
குடிக்காமல் அதைப் பாத்திரத்திலேயே வைத்து விட்டால் கஞ்சி நீர்
தைரைப் போல் உறைந்துவிடும்.இந்தக் கஞ்சிதான் உறை கஞ்சி
என்பது.இதைச் சாப்பிடக்குடாது.அதனால் வாதத்தையும்,சளியையும்
அதிகமாகும்.
--------------------------------------------------------------------------------------------------
தலைப் பகுதியில் உள்ள வர்மங்கள்:-37
1.திலர்த வர்மம்,2.கண்ணாடி கால வர்மம்,3.மூர்த்தி கால வர்மம்,4.அந்தம் வர்மம்,
5.தும்மிக் கால வர்மம்,6.பின் சுவாதி வர்மம்,7.கும்பிடு கால வ,
8.நட்சத்திர வ,9.பால வ,10மேல் கரடி வ,11.முன் சுவாதி வ,
12.நெம வர்மம்,13மந்திர கால வ,14.பின் வட்டிக் கால வ,15.காம்பூதி
கால வ,16.உள் நாக்கு கால வ,17.ஓட்டு வ,18.சென்னி வ,19.பொய்கை
கால வ,20அலவாடி வ,21.மூக்கடைக்கி கால வ,22கும்பேரி கால வ,
23.நாசி கால வ,24.வெட்டு வ,25.அண்ணாங் கால வ,26.உறக்க கால
வ,27.கொக்கி வ,28.சங்குதிரி வ,29.செவிகுத்தி கால வ,30.கொம்பு கால வ,
31.சுமைக்கால வ,32.தலைப்பாகை வ,33பூட்டுடெல்லு வ,34மூர்த்தி அடக்க வ,35
பிடரி கால வ,36பொச்சை வ,37.சரிதி வர்மம்.
நெஞ்சுப் பகுதியில் உள்ள:---13.
1.தள்ளல் நடுகுழி வர்மம்,2.திவளைக் கால வ,3.கைபுஜ மூன்றாவது வரி வ,4.சுழி ஆடி வர்மம்,5.அடிப்பக்கால வர்,6.முண்டெல்லு வர்,
7.பெரிய அஸ்தி சுருக்கி வர்,8.சிறிய அஸ்தி சுருக்கி வர்,9.ஆனந்த வாசு கால வர்,10.கதிர் வர்,11.கதிர் கால வர்,12.கூம்பு வர்,13.ஹனுமார் வர்மம்.
உடலின் முன் பகுதியில் உள்ளவை -15
1.உதிரக்கால வர்,2.பள்ளை வர்,3மூத்திரகால வர்,4.குத்து வர்,5.நேர்
வர்,6உறுமிக்கால வர்,7.ஆமென்ற வர்,8.தண்டு வர்,9.லிங்க வர்,10.
அண்ட கால வர்,11.தாலிக வர்,12.கல்லடைக் கால வர்,13.காக்கட்டை கால வர்,14.புஜ வர்,15.விதனுமான் வர்மம்.

முதுகுப் பகுதியில் உள்ளவை -10
1.மேல் சுருதி வர்,2.கைக்குழி காந்தாரி வர்,3.மேல்கைப் பூட்டு வர்,4.
கைச்சிப்பு எலும்பு வர்,5.பூணூல் கால வர்,6வெல்லுறுமி தல்லுறுமி வர்,7.கச்சை வர்,8.கூச்ச பிரம வர்,9.சங்குதிரி கால வர்,10.வலம்புரி இடம்புரி வர்மம்.

கைகளின் முன் பக்கம் உள்ளவை -9
வலம்புரி இடம்புரி, தல்லை அடக்க,துதிக்கை,தட்சணக் கால,சுழுக்கு,மூட்டு, மொளியின்,ச்கைக்குசத்திட,உள்ளங்கை வெள்ளை,ஆக 9.

ஜக்குபாய்,படம்

07/01/2010,
ஜக்குபாய்,படம் திருட்டு தணமாக வெளியாகி உள்ளது பல கோடிகளை போட்டு படம் பன்னுகிறகள் அதை இப்படி திருடி அதுவும் படம் வெளியிடும் முன்பே பலர் கூடி கேடுத்தார் என்பது போல் இப்படி செய்வது மன்னிக்க முடியா செயல் இதில் எங்கு இந்த திருட்டு தனம் அரங்கேறி உள்ளது என்று கண்டிப்பாக கண்டு பிடிக்க வேண்டும். கடும் தண்டணை அவர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் இனி இது போல் ஒரு தவறு நடக்காம்ல் கண்கானிக்க வேண்டும்.மற்றும் சினிமா தொலில் உள்ளவர்கள் தான்
இப்படி செய்திற்க முடியும் எண்பதையும் எண்னிப் பார்க்க வேண்டும்.
மண்னிக வேண்டும் நானும் இந்த படத்தை பார்த்தேன் டப்பிங் கூடெ முழுமை பெறவில்லை பல பகுதிகள் வசணம் பூற்தி குடெ ஆகவில்லை சவ்ண் சறியாக இல்லை படம் பார்க்க குலப்பம் மாக உள்ளது.

செவ்வாய், 5 ஜனவரி, 2010

இலவச ஆண்ட்டி வைரஸ்

இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் – அதிகம் டவுண்லோட் செய்யப்பட்டவை.
1. அவிரா ஆண்ட்டி வைரஸ் பெர்சனல் (Avira Anti Virus Personal)
2.அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் ஹோம் எடிஷன் (Avast Anti Virus Home Edition)
3.ஏ.வி.ஜி. 8.5 ப்ரீ ( AVG 8.5 Free)
4.மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி சொல்யூசன்ஸ் (Microsoft Securtity Solutions)

சனி, 2 ஜனவரி, 2010

2010,குடிப்பதற்க்கு ஒரு புத்தாண்டு?

குடிப்பதற்க்கு ஒரு மனம் வேண்டும்,பணம் வேண்டும்,புதிய குடிமக்கள் எண்ணிக்கை இந்த வருடம் கூடி விட்டது எண மனம் மகிழ்யோம்.மதி மயங்கி, புத்தாண்டை வறவெற்க்கும் மாக்கள் வாழ்க
எண நாம் வாழ்த்தி வளி விடுயோம்.
சென்னை: சென்னையிலும் தமிழகத்திலும் குடிப்பிரியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் விளைவாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு புத்தாண்டின்போது மதுவிற்பனை 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்தப் புத்தாண்டே கிட்டத்தட்ட மதுவின் துணையுடன்தான் பெரும்பாலானோருக்கு விடிந்திருக்கிறது எனும் அளவுக்கு புத்தாண்டு அன்று மட்டும் ரூ 47 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
இதுவரை தமிழகம் காணாத புதிய 'சாதனை' இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மொத்தம் 6,694 டாஸ்மாக் மது கடைகள் உள்ளன. சென்னையில் மட்டும் சுமார் 400-க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் உள்ளன. புத்தாண்டு தினத்தில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பிவழிந்தது. பல இடங்களில் குடிமகன்கள் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்க போலீசார் உதவினர்!
டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதி மட்டும் அனைத்து பார்களும் கிட்டத்தட்ட ஹவுஸ்ஃபுல். சாலையோர சால்னா கடைகளில் கூட்டம் மொய்த்தது. பல இளைஞர்கள் தங்கள் வாகனங்களில் அமர்ந்து, நின்று அல்லது படுத்த வண்ணம் குடித்துக் கொண்டிருந்தது இந்த இரு தினங்களிலும் சகஜமான காட்சியாக இருந்தது.
பெரும்பாலும் இந்த குடிமகன்களை போலீசார் கண்டு கொள்ளவில்லை.
சென்னையில் மட்டும் புத்தாண்டு தினத்தில் ரூ.7 கோடிக்கு மது பாட்டில் விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் அதிகமாகும். தமிழகம் முழுவதும் ரூ.47 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் கூடுதல் ஆகும்.
பிரபல சரக்குகள் 'நோ ஸ்டாக்'!
மது விற்பனை படுஜோராக நடைபெற்றதால் பிரபலமான 'சரக்கு'களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், கேட்ட சரக்கு கிடைக்காததால், கிடைத்த சரக்கை மதுப் பிரியர்கள் வாங்கி திருப்தியடைந்தனர். பல இடங்களில் பீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், பீர் பிரியர்களும் விஸ்கி, பிராந்தி என வாங்கி குடித்து தங்கள் புத்தாண்டு கடைமையை நிறைவேற்றினர்.
கூடுதல் விலைக்கு...
இரவு 10 மணிக்குள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டாலும், பார்களிலும், வெளியிடங்களிலும் வைத்து கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன. பல டாஸ்மாக் கடைகளை இரவு 10 மணிக்கு ஊழியர்கள் அடைக்க முயன்றபோது, குடிமகன்கள் பிடிவாதமாக தடுத்தனர். போலீஸ் துணையுடன்தான் இந்தக் கடைகளை அடைக்க முடிந்தது.